இதுவரை 32,000 பாலஸ்தீன மக்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாடானது போர்நிறுத்த முயற்சிகளை ஒப்புக்கொள்ளவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே, 85% ற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் காசா பகுதியில் இடம்பெயர்ந்து உள்ளனர். எட்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் வீடிழந்து தெருக்களில் உள்ளனர். வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் தரைமட்டமாகி உள்ளன. பாலியல் அத்துமீறல்கள் நடைபெற்று வருகின்றன.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழு, இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை, நிறைவேற்ற முடியவில்லை. ஐக்கியநாடுகள் சபை ரஷ்யாவிற்குச் செய்தது போல, இஸ்ரேலுக்கு எதிரான பொருளாதாரத் தடையை விதிக்கவில்லை. போர்க் குற்றங்களை விசாரிக்கவில்லை. அமெரிக்காவும், அதன் ஐரோப்ப கூட்டாளிகளும், இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக ஐநாவிற்கு அழுத்தங்களைத் தருகின்றன. ஐநாவில் இருந்து வரும் உதவிகளை காசா பகுதியில் தருவதை இஸ்ரேல் தடுக்கிறது. இவை அப்பட்டமாக சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானதாகும்.
ரமதான் நோன்பின் முதல் நாளில் 67 இறந்த உடல்கள் வந்துள்ளன. உடனடியான போர் நிறுத்தத்திற்கு ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி கோருகிறது.
போர் நடந்து கொண்டிருக்கும் போதே, சூயஸ் கால்வாய்க்கு போட்டியாக, பென் குரியன் கால்வாய்த் திட்டத்தை (Ben Gurion Canal Project of 1960) மீண்டும் திறப்பதற்கான பேச்சுக்களைத் தொடங்கியுள்ளனர். அரபு நாடுகளுக்கு எதிரான மேலாதிக்கத்தை காட்ட விரும்பும் ஏகாதிபத்திய நாடுகளே இதற்கு காரணமாகும்.
, தென் ஆப்பிரிக்க குடியரசு, இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்த வழக்கில், சர்வதேச நீதிமன்றம் கொடுத்துள்ள இடைக்கால உத்தரவை ஏஐடியுசி வரவேற்கிறது. ஆனால் இந்த உத்தரவை இஸ்ரேல் அமலாக்கவில்லை. இதற்காக சரவதேச நீதிமன்றம் இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்க வேண்டும்.
இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுசபையில், 1947 ல், பாலஸ்தீனத்தை பிரிப்பதை எதிர்த்து இந்தியா வாக்களித்தது. PLO, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான அமைப்பு என்பதை அரபுநாடுகளைத் தவிர்த்து, முதலில் அங்கீகரித்த நாடு இந்தியா. 1988 ல் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நிரந்தரத் தீர்விற்கு, இரண்டு நாடுகள் கொள்கையை ஐநா ஏற்றுக்கொள்ள இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கெனவே ஏஐடியுசி தீர்மானம் இயற்றி உள்ளது. இந்திய தொழிலாளர்களை, பாலஸ்தீன தொழிலாளர்களுக்குப் பதிலாக இஸ்ரேல் நாட்டிற்கு எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் இந்தியா அனுப்புவதை ஏஐடியுசி கடுமையாக கண்டிக்கிறது. எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் போர் நடக்கும் பகுதிகளுக்கு இந்திய தொழிலாளர்களை அனுப்பும் நிலை உள்ளது. வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு கூட இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்பப்படுவர்களுக்கு இல்லை.
பாலஸ்தீன தொழிலாளர்களுக்கும் இந்திய தொழிலாளர்களுக்கும் நிலவும் பிணைப்பை ஏஐடியுசி விதந்தோதுகிறது. ‘இரண்டு நாடுகள் தீர்வு” என்பதற்கு எங்கள் உறுதியான ஆதரவை நல்குகிறோம். 1967 க்கு முன்பு இருந்த எல்லைகளின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலேம் நகரைத் தலைநகரமாகக் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடு அமைக்கப்பட வேண்டும். இஸ்ரேல் நாட்டின் மீது தடைகள் விதிக்கப்பட வேண்டும், அது நடத்திய போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என ஏஐடியுசி கோருகிறது. சர்வதேச தொழிலாளர் ஒற்றுமையை உருவாக்க ஏஐடியுசி உறுதி கொள்கிறது. ஐக்கிய நாடுகள் சபையானது அமைதியை மீண்டும் கொண்டுவரவும், பாலஸ்தீனத்தையும், அதன் அரசுரிமையையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் ஏஐடியுசி வேண்டுகோள் விடுக்கிறது.
எல் & டி சுப்பிரமணியம் 90 மணி நேர வேலைப் பரிந்துரைஏஐடியுசியின் வன்மையான கண்டணம்
10.01.2025 இன்று ஏஐடியுசி விடுத்துள்ள அறிக்கை:
எல் & டி சுப்பிரமணியம்90 மணி நேர வேலைப் பரிந்துரை
ஏஐடியுசியின் வன்மையான கண்டணம்
நிச்சயமாக, அனைத்து வேலை நேரங்களும் இந்தியாவை உருவாக்க தேவை தான். ஆனால் பொங்கி எழும் வேலையின்மை பற்றி என்ன? சமீபத்திய ஆய்வுகளின்படி வேலையின்மை மிக அதிகமாக உள்ளது. அதனால் இளமை ஆற்றல் வீணாகிறது! சுப்ரமணியமும், மூர்த்தியும் இவ்வாறு இளமை ஆற்றல் வீணாவது பற்றி எதுவும் சொல்லவில்லை.
சுப்ரமணியம், மூர்த்தி, அதானி ஆகியோர் தேசத்திற்காக தொழிலாளர்களிடம் இருந்து நிச்சயமாக அதிகமாக விரும்புகிறார்கள். எல் & டி இன் சுப்பிரமணியம், தேசத்தைக் கட்டியெழுப்ப அவர் செய்வதைப்போல தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட வாரத்தில் 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். அவர் கூறுவது இன்ஃபோசிஸின் மூர்த்தி சொன்னதற்கு ஒப்பானதாகும்.
வாரத்தில் 48 மணி வேலை நேரத்தில், தற்போதைய தொழிலாளர்கள் எந்தச் செல்வத்தை உருவாக்கினாலும், அதானிகள், அம்பானிகள், சோக்ஸிகள் மற்றும் நீரவ் மோடிகள் போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்களும் உருவாக்கப்படும் செல்வத்தை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அநாகரீகமான இடைவெளி அதிகரித்து, 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை எட்டியுள்ளது.
இந்த ஹோன்ச்சோக்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை அழகற்றவர்களாகக் கண்டால் அது தனிப்பட்ட விஷயம். ஆனால், 138 ஆண்டுகளுக்கு முன்பு, 19 ஆம் நூற்றாண்டில் “8 மணிநேர வேலை, 8 மணிநேர குடும்ப வாழ்க்கை மற்றும் 8 மணிநேர சமூக வாழ்க்கை” என்ற கோரிக்கையை வென்றடைய உழைத்த தொழிலாளி வர்க்கம் இரத்தத்தை சிந்தியது. தொழிலாளி வர்க்கத்தின் அத்தகைய இரத்தத்தின் காரணமாக பெற்ற உரிமைகள் என்பதை ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட்டுகள் மறந்துவிடக் கூடாது.
சுப்ரமணியம் கூறுகின்ற 90 மணி நேர வேலைப் பரிந்துரையை ஏஐடியுசி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஜனவரி 6, 2025 அன்று புது தில்லியில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள், சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போதைய கார்ப்பரேட்-வகுப்புவாத சக்திகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளின் திமிர்த்தனமான மற்றும் கொடூரமான தொடர்ச்சி குறித்து தீவிர கூட்டம் கவலையை வெளிப்படுத்தியது. பாஜகவின் 3வது ஆட்சியில், தாங்க முடியாத துயரங்கள், வேலை இழப்புகள், வேலையின்மை மக்கள் மீது கொடூரமான சுமைகளை சுமத்துகிறது. ஒருபுறம் வறுமை அதிகரிக்கிறது. மறுபுறம் எதிர்த்து கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் மக்களின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை காட்டுமிராண்டித்தனமாக கட்டுப்படுத்துகிறது.
எனவே, முழு அரசியலமைப்பு தற்போதைய ஆட்சியால் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பொதுத்துறை தனியார்மயமாக்கல்/முதலீடு மற்றும் விற்பனை ஆகிய கொள்கைகள் தொடர்கிறது. இந்திய ரயில்வே, பாதுகாப்பு, நிலக்கரிச் சுரங்கங்கள் (MOD), நிலக்கரி அல்லாத சுரங்கங்கள், ஸ்டீல், துறைமுகம் மற்றும் கப்பல்துறை, விமான நிலையங்கள், சாலைகள், மின்சாரம், தொலைத்தொடர்பு, வங்கிகள், காப்பீடு போன்ற நிறுவனங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுக்கவும், 8வது ஊதியக் குழுவை அமைக்கவும் உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை அதன் முழு பலத்துடன் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன.
உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் நீண்டகாலமாக முடக்கப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளையும் , 3வது ஆட்சியில் கார்ப்பரேட் அடிமை அரசு அமுலாக்க துடிக்கும் நடவடிக்கையை மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு தீவிரமாகக் கவனித்து வருகிறது. மேலும், வரவிருக்கும் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், உழைக்கும் மக்களைக் கொள்ளையடிக்கும் அதே கார்ப்பரேட்-சேவை கொள்கைகள் தொடரும் என்று எதிர்பாக்கிறோம். இந்த நிலையில் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, கூட்டம் பின்வரும் திட்டங்களை முடிவு செய்தது:
பிப்ரவரி 5, 2025 அன்று – பட்ஜெட்டில் உள்ள மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாவட்ட/துறை மட்டங்களில் பட்ஜெட்- நகல் எரிப்பு உட்பட கூட்டுப் போராட்டங்கள்.
ஒன்றிய அரசாங்கத்தால் தொழிலாளர் குறியீடுகள் அமுலாக்குவதாக அறிவிக்கப்பட்டால், உடனடியாக நாடு முழுவதும் தொழிலாளர் குறியீடுகளை எரித்தல் மற்றும் திரும்பப் பெறும் வரை தொடர்ச்சியான போராட்டங்கள்
பொது வேலைநிறுத்தம் நடைபெறும் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். ஆனால் இப்போதே தயாரிப்பு பணிகளை தொடங்க வேண்டும்.
தொழிலாளர் குறியீடுகள் அறிவிக்கைக்கு எதிராக அனைத்துத் துறைகளிலும் உள்ள உழைக்கும் மக்களும், மாநிலங்கள் மற்றும் துறைசார்ந்த அனைத்து அமைப்புகளும், உடனடியாக பதிலுடி தரும் வகையில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் உள்ளிட்ட கட்டம் கட்டமான உறுதியான எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க, இப்போதிருந்தே தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறது.
தொழிலாளர் குறியீடுகள் மற்றும் தொடர்புடைய கொள்கைப் பிரச்சினைகளுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தின் அழைப்பை மையமாகக் கொண்ட தீவிரமான அடிமட்ட அளவிலான பிரச்சாரத்தைத் திட்டமிட, தொழிலாளர் குறியீடுகள்-அறிவிப்புக்குப் பிறகு மத்திய தொழிற்சங்கங்கள், துறைசார் சங்கங்களின் கூட்டமைப்புகள் கூட்டம் மார்ச் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும்.
இதற்கிடையில், கூட்டு நடவடிக்கைகளுக்கு திட்டமிட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் கூட்டம் ஜனவரி 15 அன்று நடத்துவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் குறியீடுகள் அமுலாக்குவதன் மூலம் அடிமைத்தனத்தின் நிபந்தனைகளை தொழிலாளர்கள் மீது சுமத்தும் ஆளும் ஆட்சியின் கொடூரமான ஆணவத்தை முறியடிக்க உறுதியான எதிர்ப்பிற்குத் தயாராகுமாறு உழைக்கும் மக்களை அழைக்கிறது.
INTUC AITUC HMS CITU AIUTUC TUCC SEWA AICCTU LPF UTUC
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி குறைந்தபட்ச ஊதியமானது திருத்தம் செய்யப்பட வேண்டும். இதனால் தோட்டம், சுரங்கம், கட்டுமானம், விவசாயம், கைத்தொழில், வீட்டு வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள். இந்த ஊதியம் குறித்து கெடுவாய்ப்பாக விவாதங்கள் நடைபெறுவதில்லை. 15-வது இந்திய தொழிலாளர் மாநாட்டு முடிவின்படி அறிவியல் பூர்வமான வகையில் குறைந்தபட்சம் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யவேண்டும். இதனை உச்ச நீதிமன்றமும் ரெப்டகாஸ் பிரெட் வழக்கிலும் (1992) , உனிச்சோயி & மற்றவர்கள் எதிர் கேரள அரசு வழக்கிலும் ( Unichoyi & others vs The state of Kerala) (1962) உறுதிப்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் தேவையின் அடிப்படையில் ஆனதாகும். உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து, மருத்துவம், கல்வி போன்ற செலவினங்களோடு, திருமணம், திருவிழாக்கள் உள்ளிட்ட சமூக கலாச்சார நிகழ்வுகளுக்காகும் செலவுகளையும் சேர்த்து ஊதியமானது கணக்கிடப்பட வேண்டும். கீழ்கண்ட காரணிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் ரெப்டகாஸ் வழக்கின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன:
மூன்று நுகர்வோரின் செலவுகள் ஒரு சம்பளதாரருக்கு கணக்கிடப்பட வேண்டும்
ஒரு சராசரி மனிதனுக்கு நாளொன்றுக்கு 2700 கேலரி சத்து தேவைப்படும் உணவு தேவை என டாக்டர். அக்ராய்டு பரிந்துரைத்துள்ளார்.
ஒரு ஆண்டுக்கு 72 கஜம் துணி
அரசாங்க தொழில் பகுதியில் உள்ள வீட்டு வசதிப்படி வாடகை
ஒட்டுமொத்த சம்பளத்தில் 20% எரிபொருள், விளக்கு உள்ளிட்ட இதர செலவின வகைகளுக்கு
குழந்தைகள் கல்வி, மருத்துவம், குறைந்த பட்ச பொழுபோக்கு, முதுமைக்கால பாதுகாப்பு, திருமணம் போன்றவைகள் குறைந்த பட்ச ஊதியத்தில் 25 % ஆக கணக்கிடப்படும்.
இதுதான் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். ஆனால் மத்திய, மாநில அரசாங்கங்கள் தன்னிச்சையாக ஊதியத்தை திருத்துகின்றன. மத்திய மாநில அரசுகள் அதனுடைய நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ரெப்டகாஸ் வழக்கு அடிப்படையில் நியாயமாக ஊதியத்தை நிர்ணயம் செய்கின்றன. ஆனால் இத்தகைய நடைமுறையை தனியார் துறை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கும்போது கடைபிடிப்பதில்லை. இதனால் அரசாங்கம் பெருநிறுவனங்களின் நலனைப் பாதுகாக்க எடுக்கும் பாசங்குத்தனமான நடவடிக்கை அம்பலமாகிறது.
குறைந்த பட்ச ஊதியம் என்பது போராட்டங்களின்போது பேசப்படும் முழக்கம் அல்ல என்று ஏஐடியுசி கருதுகிறது. அறிவியல்பூர்வமாக குறைந்தபடச ஊதியத்தை நிர்ணயம் செய்யும் வகையில் நமது பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும். ஆலோசனைக் குழுக்களில் அதற்குரிய வாதுரைகளைச் செய்ய வேண்டும். சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டும். கர்நாடக மாநில ஏஐடியுசி, இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி குறைந்த பட்ச ஊதியமானது ரூ.31,556 என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக மாநில, மாவட்ட அளவில் போராட்டங்களை நடத்தியும். அதனைத் தொடர்ந்து சட்டப்போராட்டத்தையும் நடத்துகிறது.
மக்களுடைய வாங்கும்சக்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. குறைந்த பட்ச ஊதியத்தை சரியாக திருத்துவதன் மூலம் தனியார் நுகர்வு அதிகரிக்கும்; அது பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கும். தனியார் நுகர்வு என்பது மொத்த ஜிடிபியில் 60 % ஆகும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மக்கள் செலவு செய்வது குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. அவர்களின் கடன் அதிகரித்துள்ளது.
மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் சந்தையில் பொருட்களின் தேவை குறைந்துள்ளது. இதனால் உற்பத்தி மேலும் குறைந்து, வேலைவாய்ப்பு பாதிக்கிறது. எனவே மக்களின் உண்மையான ஊதியம் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, திருத்தப்பட வேண்டும்.தற்போதைய கால மாற்றத்திற்கொப்ப இணைய வசதியும் குறைந்தபட்ச ஊதியத்தில் இடம்பெற வேண்டும். பெற்றோர்களை பாதுகாக்க வேண்டிய சட்டபூர்வ நிலையும் வந்துள்ளதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. எனவே பெற்றோர்களுக்கான செலவையும் சேர்த்து, சம்பளம் வாங்கும் ஒருவருக்கு ஐந்து அலகுகள் வீதம் குறைந்த பட்ச ஊதியம் கணக்கிட வேண்டும்.
எனவே விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 1முதல் 3 வரை கூடியுள்ள ஏஐடியுசி பொதுக்குழுவானது, அரசுக்கும் பெருநிறுவன நலன்களுக்கும் இடையில் உள்ள உறவுக்கு எதிராக அறிவியல்பூர்வமான வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை திருத்துவற்கான பரப்புரையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென தீர்மானிக்கிறது.