Connect with us

Uncategorized

Published

on

தொழிலாளர்  சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெற, மக்கள் விரோத,

தொழிலாளர், விவசாயி விரோதக் கொள்கைகளுக்கு எதிராக…..

நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தயாராவோம்

2025 பிரவரி 5 ஒன்றிய நிதி நிலை அறிக்கை கண்டன நாள்

மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல்

07.01.2025

       ஜனவரி 6, 2025 அன்று புது தில்லியில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும்   கூட்டமைப்புகள், சங்கங்களின் கூட்டுக்குழு  கூட்டம் நடைபெற்றது.  தற்போதைய கார்ப்பரேட்-வகுப்புவாத சக்திகளின்  மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளின் திமிர்த்தனமான மற்றும் கொடூரமான தொடர்ச்சி குறித்து தீவிர கூட்டம் கவலையை வெளிப்படுத்தியது.  பாஜகவின்  3வது ஆட்சியில், தாங்க முடியாத துயரங்கள், வேலை இழப்புகள், வேலையின்மை மக்கள் மீது  கொடூரமான சுமைகளை சுமத்துகிறது. ஒருபுறம் வறுமை அதிகரிக்கிறது.  மறுபுறம் எதிர்த்து   கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் மக்களின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை காட்டுமிராண்டித்தனமாக கட்டுப்படுத்துகிறது.

 எனவே, முழு அரசியலமைப்பு தற்போதைய ஆட்சியால் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பொதுத்துறை தனியார்மயமாக்கல்/முதலீடு மற்றும் விற்பனை ஆகிய கொள்கைகள்  தொடர்கிறது. இந்திய ரயில்வே, பாதுகாப்பு, நிலக்கரிச் சுரங்கங்கள் (MOD), நிலக்கரி அல்லாத சுரங்கங்கள், ஸ்டீல், துறைமுகம் மற்றும் கப்பல்துறை, விமான நிலையங்கள், சாலைகள், மின்சாரம், தொலைத்தொடர்பு, வங்கிகள், காப்பீடு போன்ற  நிறுவனங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுக்கவும், 8வது ஊதியக் குழுவை அமைக்கவும் உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை  அதன் முழு பலத்துடன் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன.

உழைக்கும் மக்களின்  ஒன்றுபட்ட  போராட்டத்தின் மூலம் நீண்டகாலமாக முடக்கப்பட்ட நான்கு தொழிலாளர்  சட்டத்தொகுப்புகளையும்  , 3வது ஆட்சியில் கார்ப்பரேட் அடிமை அரசு அமுலாக்க துடிக்கும்  நடவடிக்கையை  மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு    தீவிரமாகக் கவனித்து வருகிறது.  மேலும், வரவிருக்கும்  ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், உழைக்கும் மக்களைக் கொள்ளையடிக்கும் அதே கார்ப்பரேட்-சேவை கொள்கைகள் தொடரும் என்று எதிர்பாக்கிறோம். இந்த நிலையில் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, கூட்டம் பின்வரும் திட்டங்களை முடிவு செய்தது:

  • பிப்ரவரி 5, 2025 அன்று – பட்ஜெட்டில் உள்ள மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாவட்ட/துறை மட்டங்களில் பட்ஜெட்- நகல் எரிப்பு உட்பட கூட்டுப் போராட்டங்கள்.
  • ஒன்றிய அரசாங்கத்தால் தொழிலாளர் குறியீடுகள் அமுலாக்குவதாக அறிவிக்கப்பட்டால்,   உடனடியாக  நாடு முழுவதும் தொழிலாளர் குறியீடுகளை எரித்தல் மற்றும் திரும்பப் பெறும் வரை தொடர்ச்சியான போராட்டங்கள்
  • பொது வேலைநிறுத்தம் நடைபெறும்  தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். ஆனால் இப்போதே  தயாரிப்பு பணிகளை  தொடங்க வேண்டும்.

தொழிலாளர் குறியீடுகள் அறிவிக்கைக்கு எதிராக அனைத்துத் துறைகளிலும் உள்ள உழைக்கும் மக்களும், மாநிலங்கள் மற்றும் துறைசார்ந்த அனைத்து அமைப்புகளும், உடனடியாக  பதிலுடி தரும் வகையில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் உள்ளிட்ட கட்டம் கட்டமான உறுதியான எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க, இப்போதிருந்தே தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறது.

தொழிலாளர் குறியீடுகள் மற்றும் தொடர்புடைய கொள்கைப் பிரச்சினைகளுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தின் அழைப்பை மையமாகக் கொண்ட தீவிரமான அடிமட்ட அளவிலான பிரச்சாரத்தைத் திட்டமிட, தொழிலாளர் குறியீடுகள்-அறிவிப்புக்குப் பிறகு மத்திய தொழிற்சங்கங்கள், துறைசார் சங்கங்களின் கூட்டமைப்புகள் கூட்டம் மார்ச் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும்.

இதற்கிடையில், கூட்டு நடவடிக்கைகளுக்கு திட்டமிட மத்திய தொழிற்சங்கங்கள்  மற்றும்  ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் கூட்டம் ஜனவரி 15 அன்று நடத்துவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

 தொழிலாளர் குறியீடுகள் அமுலாக்குவதன் மூலம் அடிமைத்தனத்தின் நிபந்தனைகளை  தொழிலாளர்கள் மீது சுமத்தும்  ஆளும் ஆட்சியின் கொடூரமான ஆணவத்தை முறியடிக்க  உறுதியான எதிர்ப்பிற்குத் தயாராகுமாறு உழைக்கும் மக்களை அழைக்கிறது.

INTUC   AITUC   HMS   CITU   AIUTUC   TUCC   SEWA   AICCTU   LPF   UTUC

நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தயாராவோம்

2025 பிரவரி 5 ஒன்றிய நிதி நிலை அறிக்கை கண்டன நாள்

மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

Published

on

எல் & டி  சுப்பிரமணியம் 90 மணி நேர வேலைப் பரிந்துரை ஏஐடியுசியின் வன்மையான கண்டணம்

10.01.2025 இன்று ஏஐடியுசி விடுத்துள்ள அறிக்கை:

எல் & டி  சுப்பிரமணியம் 90 மணி நேர வேலைப் பரிந்துரை

ஏஐடியுசியின் வன்மையான கண்டணம்

நிச்சயமாக, அனைத்து வேலை நேரங்களும் இந்தியாவை உருவாக்க தேவை தான். ஆனால் பொங்கி எழும் வேலையின்மை பற்றி என்ன? சமீபத்திய ஆய்வுகளின்படி வேலையின்மை மிக அதிகமாக உள்ளது. அதனால் இளமை ஆற்றல் வீணாகிறது!  சுப்ரமணியமும், மூர்த்தியும்  இவ்வாறு இளமை ஆற்றல் வீணாவது  பற்றி எதுவும் சொல்லவில்லை.

 சுப்ரமணியம், மூர்த்தி, அதானி ஆகியோர்  தேசத்திற்காக தொழிலாளர்களிடம் இருந்து நிச்சயமாக அதிகமாக விரும்புகிறார்கள். எல் & டி இன் சுப்பிரமணியம், தேசத்தைக் கட்டியெழுப்ப அவர் செய்வதைப்போல தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட வாரத்தில் 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.  அவர் கூறுவது இன்ஃபோசிஸின் மூர்த்தி சொன்னதற்கு ஒப்பானதாகும்.

வாரத்தில் 48 மணி வேலை நேரத்தில், தற்போதைய  தொழிலாளர்கள்  எந்தச் செல்வத்தை உருவாக்கினாலும், அதானிகள், அம்பானிகள், சோக்ஸிகள் மற்றும் நீரவ் மோடிகள் போன்ற   பல கார்ப்பரேட் நிறுவனங்களும் உருவாக்கப்படும் செல்வத்தை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அநாகரீகமான இடைவெளி அதிகரித்து, 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை எட்டியுள்ளது.      

இந்த ஹோன்ச்சோக்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை அழகற்றவர்களாகக் கண்டால் அது தனிப்பட்ட விஷயம். ஆனால், 138 ஆண்டுகளுக்கு முன்பு, 19 ஆம் நூற்றாண்டில் “8 மணிநேர வேலை, 8 மணிநேர குடும்ப வாழ்க்கை மற்றும் 8 மணிநேர சமூக வாழ்க்கை” என்ற கோரிக்கையை வென்றடைய உழைத்த தொழிலாளி வர்க்கம்  இரத்தத்தை சிந்தியது.   தொழிலாளி வர்க்கத்தின் அத்தகைய இரத்தத்தின் காரணமாக பெற்ற உரிமைகள் என்பதை ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட்டுகள் மறந்துவிடக் கூடாது.

சுப்ரமணியம் கூறுகின்ற 90 மணி நேர வேலைப் பரிந்துரையை ஏஐடியுசி வன்மையாகக் கண்டிக்கிறது.

அமர்ஜித் கவுர்,

பொதுச்செயலாளர்,

ஏஐடியுசி

Continue Reading

Uncategorized

Published

on

அறிவியல் பூர்வமாக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி குறைந்தபட்ச ஊதியமானது திருத்தம் செய்யப்பட வேண்டும். இதனால் தோட்டம், சுரங்கம், கட்டுமானம், விவசாயம், கைத்தொழில், வீட்டு வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள். இந்த ஊதியம் குறித்து கெடுவாய்ப்பாக விவாதங்கள் நடைபெறுவதில்லை. 15-வது இந்திய தொழிலாளர் மாநாட்டு முடிவின்படி அறிவியல் பூர்வமான வகையில் குறைந்தபட்சம் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யவேண்டும். இதனை உச்ச நீதிமன்றமும் ரெப்டகாஸ் பிரெட் வழக்கிலும் (1992) , உனிச்சோயி & மற்றவர்கள் எதிர் கேரள அரசு வழக்கிலும் ( Unichoyi & others vs The state of Kerala) (1962) உறுதிப்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் தேவையின் அடிப்படையில் ஆனதாகும். உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து, மருத்துவம், கல்வி போன்ற செலவினங்களோடு, திருமணம், திருவிழாக்கள் உள்ளிட்ட சமூக கலாச்சார நிகழ்வுகளுக்காகும் செலவுகளையும் சேர்த்து ஊதியமானது கணக்கிடப்பட வேண்டும்.
கீழ்கண்ட காரணிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் ரெப்டகாஸ் வழக்கின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன:

  • மூன்று நுகர்வோரின் செலவுகள் ஒரு சம்பளதாரருக்கு கணக்கிடப்பட வேண்டும்
  • ஒரு சராசரி மனிதனுக்கு நாளொன்றுக்கு 2700 கேலரி சத்து தேவைப்படும் உணவு தேவை என டாக்டர். அக்ராய்டு பரிந்துரைத்துள்ளார்.
  • ஒரு ஆண்டுக்கு 72 கஜம் துணி
  • அரசாங்க தொழில் பகுதியில் உள்ள வீட்டு வசதிப்படி வாடகை
  • ஒட்டுமொத்த சம்பளத்தில் 20% எரிபொருள், விளக்கு உள்ளிட்ட இதர செலவின வகைகளுக்கு
  • குழந்தைகள் கல்வி, மருத்துவம், குறைந்த பட்ச பொழுபோக்கு, முதுமைக்கால பாதுகாப்பு, திருமணம் போன்றவைகள் குறைந்த பட்ச ஊதியத்தில் 25 % ஆக கணக்கிடப்படும்.

இதுதான் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். ஆனால் மத்திய, மாநில அரசாங்கங்கள் தன்னிச்சையாக ஊதியத்தை திருத்துகின்றன. மத்திய மாநில அரசுகள் அதனுடைய நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ரெப்டகாஸ் வழக்கு அடிப்படையில் நியாயமாக ஊதியத்தை நிர்ணயம் செய்கின்றன. ஆனால் இத்தகைய நடைமுறையை தனியார் துறை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கும்போது கடைபிடிப்பதில்லை. இதனால் அரசாங்கம் பெருநிறுவனங்களின் நலனைப் பாதுகாக்க எடுக்கும் பாசங்குத்தனமான நடவடிக்கை அம்பலமாகிறது.

குறைந்த பட்ச ஊதியம் என்பது போராட்டங்களின்போது பேசப்படும் முழக்கம் அல்ல என்று ஏஐடியுசி கருதுகிறது. அறிவியல்பூர்வமாக குறைந்தபடச ஊதியத்தை நிர்ணயம் செய்யும் வகையில் நமது பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும். ஆலோசனைக் குழுக்களில் அதற்குரிய வாதுரைகளைச் செய்ய வேண்டும். சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டும். கர்நாடக மாநில ஏஐடியுசி, இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி குறைந்த பட்ச ஊதியமானது ரூ.31,556 என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக மாநில, மாவட்ட அளவில் போராட்டங்களை நடத்தியும். அதனைத் தொடர்ந்து சட்டப்போராட்டத்தையும் நடத்துகிறது.

மக்களுடைய வாங்கும்சக்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. குறைந்த பட்ச ஊதியத்தை சரியாக திருத்துவதன் மூலம் தனியார் நுகர்வு அதிகரிக்கும்; அது பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கும். தனியார் நுகர்வு என்பது மொத்த ஜிடிபியில் 60 % ஆகும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மக்கள் செலவு செய்வது குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. அவர்களின் கடன் அதிகரித்துள்ளது.

மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் சந்தையில் பொருட்களின் தேவை குறைந்துள்ளது. இதனால் உற்பத்தி மேலும் குறைந்து, வேலைவாய்ப்பு பாதிக்கிறது. எனவே மக்களின் உண்மையான ஊதியம் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, திருத்தப்பட வேண்டும்.தற்போதைய கால மாற்றத்திற்கொப்ப இணைய வசதியும் குறைந்தபட்ச ஊதியத்தில் இடம்பெற வேண்டும். பெற்றோர்களை பாதுகாக்க வேண்டிய சட்டபூர்வ நிலையும் வந்துள்ளதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. எனவே பெற்றோர்களுக்கான செலவையும் சேர்த்து, சம்பளம் வாங்கும் ஒருவருக்கு ஐந்து அலகுகள் வீதம் குறைந்த பட்ச ஊதியம் கணக்கிட வேண்டும்.

எனவே விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 1முதல் 3 வரை கூடியுள்ள ஏஐடியுசி பொதுக்குழுவானது, அரசுக்கும் பெருநிறுவன நலன்களுக்கும் இடையில் உள்ள உறவுக்கு எதிராக அறிவியல்பூர்வமான வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை திருத்துவற்கான பரப்புரையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென தீர்மானிக்கிறது.

#####

Continue Reading

Uncategorized

முன்கூட்டியே செலுத்தும் சீர்மிகு மீட்டர் கொள்கையை கைவிடு

Published

on

இந்தியா முழுவதும் 25 கோடி சீர்மிகு மீட்டர் (smart meter) நிறுவும் கொள்கை அமலாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு 60 சத நிதியையும், மாநில அரசுகள் மீதித்தொகையையும், மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு (Discoms) தர வேண்டும். பெருநிறுவனங்களின் கோரிக்கைப்படி சீர்மிகு மீட்டர்கள் பொறுத்தும் திட்டம் அமலாக்கப்படுகிறது. இதனால் மின்சாரத்துறையில், இலாபம் வரும் பகுதியை தனியாருக்கு அளிக்க உள்ளனர்.

தனியார் பெருநிறுவனங்கள் மின் உற்பத்தி, பகிர்மானம், விநியோகம் என அனைத்தையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரும்புகின்றனர். மின்சாரத்திற்கு தரப்படும் எல்லாவித மானியத்தையும் நிறுத்த விரும்புகின்றனர். சீர்மிகு மீட்டர் அமலானால், முன்னதாகவே பணத்தை கட்டினால்தான் மின்சாரம் கடைக்கும். நுகர்வோர், அரசாங்கத்தின் பணத்தைக்கொண்டு, தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்வதே முதலாளிகளின் நோக்கமாகும். மின் கட்டணம் வருடம்தோறும் நிர்ணயிக்கப்படும். இதனால் மின்சாரம் அடிப்படை தேவை என்ற நிலையில் இருந்து மாறி, இலாப நோக்கிலேயே செயல்படும். தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் 20,000 தொழிலாளர்களும், மகாராஷ்டிரா வில் 30,000 தொழிலாளர்களும் வேலை இழப்பர். சீர்மிகு மீட்டர் திட்டத்தை, மின்சார தொழிலாளர்கள், நுகர்வோர், பொதுமக்களோடு இணைந்து எதிர்த்து வருகிறார்கள்.

மக்கள் விரோத, மாநில அரசுகளுக்கு விரோதமான, பெரு நிறுவனங்கள் பலன் அடையும் வகையில் 2022 ல் மின் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. மின் விநியோகத்தில் பல வகைகளில் தனியாருக்கு உரிமம் வழங்குவதற்கு இது வழிவகை செய்தது. இதனால் மின்சாரம் தனியார்மயமாகும். தொழிலாளர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு காரணமாக அது சட்டமாகவில்லை. இதிலுள்ள பிரிவுகள் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளன. மின்சாரம் விநியோகம் செய்பவர்கள் இதில் முதலீடு ஏதும் செய்யப்போவதில்லை.

நுகர்வோருக்கு விரோதமான, தேச விரோதமான, மாநில உரிமைகளைப் பறிக்கும் காட்டுமிராண்டி மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். தனியார்மயத்தை எதிர்த்து போராடும் 15 இலடசம் மின் தொழிலாளர்களுக்கு ஏஐடியுசி தனது ஆதரவை நல்குகிறது.

Continue Reading

Trending

Copyright © 2022 Tamilnadu AITUC. Developed by : Marxist Info Systems, Coimbatore.