Connect with us

கடிதங்கள்

தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத, மோடி அரசை வீழ்த்த!தமிழ்நாட்டின் அனைத்து தொழிற்சங்கங்கள்திமுக தலைமையிலான ‘இந்தியா’கூட்டணிக்கு ஆதரவு!

Published

on

“தொழிலாளர் படை வளர்ச்சியின் தூண் என்கிறது பாஜகவின் 2014 தேர்தல் அறிக்கை. ஆனால் மோடி அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள் தான் நாட்டின் வளர்ச்சிக்கு காரணம் என்றார் மோடி. தொழிலாளர்கள் 150 ஆண்டு காலமாக போராடிப் பெற்ற சட்டங்கள் 44 ஐ சில நொடிகளில் தூக்கி எறிந்து விட்டு, அவற்றில் ஏற்கனவே இருந்த நல்லவைகள் அனைத்தையும் அகற்றி நான்கு சட்டத் தொகுப்புகளாக நிறைவேற்றப்பட்டது. தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டு போராடியதால் இந்த நான்கு சட்டத் தொகுப்புகள் அமுலுக்கு கொண்டு வர முடியவில்லை. தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியம், ஓய்வூதியம், பணிப்பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பு அனைத்தும் கேள்விக்குறியாகி உள்ளன.
நான்கு சட்டத் தொகுப்புகள் செயலுக்கு வரும் முன்பே ஆஷா, அங்கன்வாடி போன்ற தொழிலாளர்கள் திட்ட தொழிலாளர்களும், இணைய வழி வியாபாரத்தில் உணவுப் பொருள் உள்ளிட்டவற்றை வீட்டில் வந்து கொடுக்கும் கிக் தொழிலாளர்களும் உள்ளிட்ட 30 கோடி தொழிலாளர்கள் தொழிலாளர் என்ற வரையறையில் இருந்தே விரட்டி அடிக்கப்பட்டு விட்டனர்.
கட்டிட தொழிலாளர் சட்டத்தை செயலிழக்கச் செய்து, அதில் உள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் தொழிலாளர் பணத்தை ஏப்பம் விட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ‘இ’ ஷ்ரம் எனும் பெயரில் 30 கோடி தொழிலாளர்களை பதிவு செய்து; அவர்கள் நலனுக்காக இது வரை ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழைகளின் எண்ணிக்கை 25% த்தை தாண்டி இருக்கிறது. விவசாயிகள் 700 க்கும் அதிகமானோர் போராட்டகளத்தில் உயிரை பலி கொடுத்த பின்பும், விவசாயிகளிடம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
தேசிய சொத்துக்கள் மற்றும் நிதிகளை ஒரு சில தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு வெட்கமின்றி தாரை வார்க்கின்றனர். பாராளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற இந்திய ஜனநாயகத்தின் அனைத்து அமைப்புகளையும் ஊடுருவி, கைப்பற்றுகின்றனர். ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மோடி அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பல்வேறு சட்டங்கள், நிர்வாக ஆணைகள் மற்றும் கொள்கைகள் மூலம் தொழிலாளர், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை அரசியல் சட்டத்திற்கு விரோதமாக மறுக்கிறது. பல்வேறு பிரிவு மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும், அவர்களின் அனைத்து எதிர்ப்புக் குரல்களையும் நசுக்குகிறது. அரசியலமைப்பு நிறுவனங்களை வகுப்புவாத மயமாக்குவது, நிர்வாக அதிகாரிகள் மற்றும் அமைப்புகளை முற்றிலும் தவறாகப் பயன்படுத்துவது, துஷ்பிரயோகம் செய்வது போன்ற ஆபத்தான விளையாட்டுக்களை திட்டமிட்டு நடத்துகிறது. ஊடக சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றவாளிகளை வெட்கமின்றி பாதுகாக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறும் சட்டம் மூலம் கார்ப்பரேட்டுகள் மற்றும் பாஜகவின் கள்ளக்கூட்டை சட்டபூர்வமாக்கி, மக்களுக்கு பதில் சொல்ல முடியாது என்ற பாஜகவின் ஆணவம் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தகர்த்தெறியப் பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பாஜக ஆட்சி கடைபிடித்த கொள்கையின் விளைவாக நாட்டிற்கு நீண்ட கால ஆபத்தை எதிர் கொள்ளூம் அபாயம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஒன்றிய பாஜக மோடி அரசின் பேரழிவுக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்களின் பல்வேறு பிரிவுகள் ஏற்கனவே பல முனைகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, பாசிச வகுப்புவாத கார்ப்பரேட் கூட்டணியை எதிர்த்து, தோற்கடிப்பதற்கான ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளன. இந்தியா கூட்டணி கட்சிகளும், மக்கள் அமைப்புகளும் போராட்டத்தில் ஆதரவளித்து பங்கேற்றன.
விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்கள், பொதுமக்களை பாதிக்கும் மோட்டார் வாகன சட்டத் திருத்தம், மின்சார திருத்தச் சட்டம் போன்றவைகளை திரும்பப் பெறவும் தொழிலாளர்கள், விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் இந்தியா கூட்டணி கட்சிகள் வாக்குறுதி அளித்துள்ளன.
ஆகவே, மாணவர்களை, இளைஞர்களை, பெண்களை, விவசாயிகளை, தொழிலாளர்களை, பொதுமக்களை என அனைத்து தரப்பினரையும் வஞ்சிக்கும் மோடி அரசையும், விவசாயிகள் தொழிலாளர் விரோத சட்டங்களை நிறைவேற்றுவதில் பாஜக அரசுக்கு உடந்தையாக இருந்த அதிமுக கூட்டணியையும் வீழ்த்தி நாட்டைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டுகிறோம்.

மு.சண்முகம்,எம்.பி. க.அ.ராஜாஸ்ரீதர் ம.இராதாகிருஷ்ணன் ஜி.சுகுமாறன் டி.வி. சேவியர்
LPF HMS AITUC CITU INTUC

எம்.திருநாவுக்கரசு எஸ்.மாயாண்டி இரா.அந்திரிதாஸ் ஏ.எஸ்.குமார் க.பேரறிவாளன்
AICCTU TUCC MLF LTUC LLF

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடிதங்கள்

உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி குறைப்பு – ஏஐடியுசி கடிதம்

Published

on

தொழிலாளர் ஆணையர் அவர்கள்,

தேனாம்பேட்டை,

சென்னை 600006.

அய்யா,

பொருள்: குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948 பல்வேறு தொழில்களுக்கு   

         01.04.2024 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி  கணக்கீடு   

         அட்டவணை தொடர்பாக

பார்வை: 1.தங்கள் கடிதம் செ3/ 5476/ 2024-3 நாள் 29.2.2024

         2. தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சுற்றறிக்கை    

     ந.க.எண்:24608/2022/ இஎ- 1, நாள் 27.10.2023

*************************

பார்வையில் கண்ட தங்களது கடிதமும் அதனுடன் இணைக்கப்பட்ட அகவிலைப்படி கணக்கீடு அட்டவணையும் கிடைக்கப் பெற்றோம்.

அதில் வரிசை எண் 41ல், உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி பற்றிய விவரம் உள்ளது. (2டி) எண் 36 நாள் 20.6.2023 தேதியிட்ட அரசாணையின் படி, அகவிலைப்படி கணக்கு தரப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அரசாணையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தாங்கள் அறிந்ததே.

மேலும், உள்ளாட்சிகளின் நிர்வாக அமைப்பான நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் பார்வை இரண்டில் கண்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

“எனவே அரசினால் குறைந்த பட்ச கூலி சட்டம் 1948ன் வெளியிடப்பட்ட எண்.62 தொழிலாளர் மற்றும் வேலைவாய்புத்துறை, நாள் 11.10.2017-ன்படி நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலி மேற்படி ஒப்பந்த பணியாளர்களுக்கு பிரதி மாதம் தவறாமல் வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

2023-24 ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டி பிறப்பிக்கப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசாணை எண்.36. நாள் 16.06.2023 தடையானை பிறப்பிக்கப்பட்டதாலும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டபடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.”

தங்களின் உடனடி பார்வைக்காக அந்த சுற்றறிக்கையின் நகலையும் இத்துடன் இணைத்து அனுப்பியிருக்கிறேன்.

அரசாணை எண் 36 உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு இருக்கும்போது, அதில் கூறப்பட்டுள்ளவாறு அகவிலைப்படியை கணக்கிட்டு அனுப்புவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளும் இதனை அடிப்படையாகக் கொண்டு அகவிலைப்படியை குறைப்பதற்கு இது வழி வகுத்திருக்கிறது.

உள்ளாட்சிகளில், குறிப்பாக துப்புரவு பணிகளில் ஈடுபடுவோர் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவை சேர்ந்தவர்களாகவும்,  இந்த அரசாணைகளுக்குள் புகுந்து நிர்வாகத்துடன் வாதிட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இந்நிலையில் இவ்வாறு ஒரு ஆவணத்தை நிர்வாக அதிகாரிகளின் கையில் கொடுத்திருப்பது, தமிழ்நாடு அரசே இந்தத் தொகையை தான் கொடுக்க உத்தரவிட்டிருக்கிறது என்று சொல்லி தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு இது பெரும் வாய்ப்பு அளித்திருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தும், அதை மீறி அரசாணையை அமலாக்க முயல்வதும், தடை விதிக்கப்பட்டுள்ள ஆணையின்படி அகவிலைப்படி கணக்கிட்டு சொல்வதும் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பது ஆகும்.

ஆகவே தாங்கள் தயவு செய்து தாங்கள் வெளியிட்டுள்ள பட்டியலுக்கு தக்க திருத்தம் செய்து மறு வெளியீடு செய்யுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

                                                         தங்கள் உண்மையுள்ள

                                                         (ம.இராதாகிருஷ்ணன்)

                                                          பொதுச் செயலாளர்

Continue Reading

Trending

Copyright © 2022 Tamilnadu AITUC. Developed by : Marxist Info Systems, Coimbatore.