Connect with us

அரசியல்

ஊழலில் திளைக்கும் பாஜவை தோற்கடிப்பீர் -இந்தியாவைக் காப்பீர்

Published

on

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக , புது தில்லியில், மார்ச்சு 16,17 தேதிகளில் நடைபெறும் ஏஐடியுசியின் நிர்வாகக்குழுவானது, இந்தியாவில் பரவலாகவும், பெருமளவிலும் நடக்கும் ஊழல் குறித்து கவனிக்கிறது.

ஆளுகின்ற பாஜக அரசானது ஊழலில் மூழ்கித் திளைக்கிறது. 2014 ல் தனது தேர்தல் அறிக்கையில் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் தார்மீகரீதியலும், அரசியல்ரீதியலும், ஒழுக்கரீதியிலும் பாஜகவானது நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி தலைமையில் நம்ப முடியாத அளவுக்கு ஊழல் நடைபெறுகிறது.

அரசியல் கட்சியான பாஜக செல்வத்தைக் குவித்துள்ளது. பாஜக தலைவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் நம்ப முடியாத எதிர்காலத்தை உருவாக்கியுள்ளனர். நரேந்திர மோடியின் கூட்டாளிகளான அதானியும், அம்பானியும் உலகின் மிகச்சில பணக்காரர்களாக உயர்ந்து உள்ளனர். ஆசியாவில் இந்தியாவில் ஊழலின் விகிதம் மலிந்துள்ளதாக, Global Corruption Barometer of Transparency International என்ற உலக அளவிலான குடிமைச் சமூகம் கூறுகிறது. இது மோடியால் உருவானதாகும்.

ஊழலைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த எல்லா சட்டங்களும் மோடியால் வேண்டுமென்றே நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் சாரத்தை இழந்து விட்டது. பாஜகவின் கடந்த எட்டு ஆண்டுகால ஆட்சியில், தகவலையும், பொறுப்பேற்றலையும் கேட்டதற்காக 80 தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர். 2014 ல் UPA அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட குடிமக்கள் சாசனம் & குறை தீர்க்கும் மசோதாவை செயல் இழக்கச் செய்துவிட்டது. அதனை பாஜக அரசானது மீண்டும் கொண்டு வரவில்லை. இடித்துரைப்பாளர் சட்டம் 2014 என்பது ஊழல் குறித்து சொல்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கொண்டுவரப்பட்டது. அது திருத்தப்பட்டு, புகார் அளிப்பவர்களை வெளிப்படுத்தும் வகையிலும், புகார் அளித்ததற்காக வழக்குத் தொடுக்கும் வகையிலும் மாற்றம் செய்யப்பட்டது. பாஜக கொண்டு வந்த திருத்தங்களால் லோக்பால் & லோகாயுதா சட்டம் 2014 அதிகாரமற்றுவிட்டது.

ஊழலை சட்டப்படியானதாக்க, பாஜகவானது பாராளுமன்ற நெறிமுறைகளை முறைகேடாக பயன்படுத்தியது. கம்பெனிகள் சட்டம், வருமான வரிச் சட்டம், FCNR சட்டம், சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் போன்றவை கம்பெனிகளுக்கு ஆதரவாக திருத்தப்பட்டு, கொள்ளையில் பங்கு பாஜகவிற்கு கிடைக்கிறது. புதிய திட்டங்களும் பரஸ்பரம் ஆதாயம் வரும்வகையில் உருவாக்கப்படுகின்றன. தவறிழைப்பதில் எல்லாவித நெறிமுறைகளையும் மீறிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஊழலில் ஒரு கறுப்பு வரலாற்றை உருவாக்கியுள்ளது.

தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக அம்பலமாகியுள்ளது. உச்சநீதிமன்றமானது அதனை அரசியலமைப்புக்கு விரோதமானது எனச் சொல்லி தடைசெய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி விவரங்களை கொடுப்பதை தவிர்க்க பெருமளவு முயற்சி எடுத்தும் வேறு வழியின்றி இப்போது கொடுத்துள்ளது. இதில் 57 % தேர்தல் பத்திரங்களை பாஜக பெற்றுள்ளது. பாராளுமன்ற நெறிமுறைகளை மீறி பிரதம மந்திரியால் இது அறிவிக்கப்பட்ட திட்டமாகும். நன்கொடை அளித்தது யார், பயன்பெற்றது யார் என்ற விவரங்களை மறைப்பதற்காக வருமான வரிச் சட்டமும், கம்பெனி சட்டமும் திருத்தப்பட்டன. பாஜகவும், மோடியும் இன்று அம்பலப்பட்டுள்ளனர்.

அரசாங்க திட்டங்களை அமலாக்குவதில் ஊழல் இருப்பதாக, மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (CAG) 2023 ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். 7.5 இலட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்திய சாலை திட்டம்( PM – JAY), ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் தயாரித்த பிழையான இயந்திரம், பிரதம மந்திரி சுகாதாரத் திட்டம், சிறுபான்மை உதவித்தொகை திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலையில் வசூலிக்கப்படும் டோல் கட்டணம் போன்றவைகளில் நடந்துள்ள ஊழல்களை மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர்( CAG) கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட ஊழல் குறித்து பேச எதிர்கட்சிகள் கோரியபோதும் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்படவில்லை. இந்த அறிக்கையை தயாரித்த மூன்று அதிகாரிகள் மிரட்டப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டனர்.

ராபேல் விமானங்கள் வாங்கியதில் 21, 075 கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றுள்ளது. அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பானது அம்பானிக்கு இலாபமாக மாறியுள்ளது. இதனை நரேந்திர மோடி செய்திருக்கிறார். ராபேல் போர் விமானங்களை பிரான்சைச் சேர்ந்த தசால்ட் விமான நிறுவனத்திடமிருத்தும், அனில் அம்பானியின் ரிலையன்சிடமிருந்தும் வாங்க மோடிதான் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் இருந்த இரகசிய விபரங்களை பிரான்ஸ் வெளியிட்டது. அதில் “ஊழல்” “செல்வாக்கு காட்டப்பட்டது” ” பண மோசடி” ( money laundering) , “பாரபட்சம்” “அதீத விரக்குறைப்பு” போன்றவை இந்த விமானங்கள் வாங்கப்பட்ட போது இருந்தன என்று கூறியது. இதுகுறித்து விசாரிக்க பிரான்ஸ் ஒரு நீதிபதியை நியமித்தது. இந்த விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை என பிரான்ஸ் அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.

அதானி குழுமம் செய்த முறையற்ற கணக்கீடுகள் பற்றி ஹித்தன்பர்க் அறிக்கை கூறியுள்ளது. அதானி குழுமத்தின் இலாபமானது உயர்த்திக் காட்டப்பட்டு, நட்டமானது குறைத்து காட்டப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது ரூ.56,142 கோடிகளை அம்பானி பங்குகளில் முதலீடு செய்துள்ளது; பாரத ஸ்டேட் வங்கியானது ரூ. 38,150 கோடிகளை கடனாக கொடுத்துள்ளது; வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (EPFO) ரூ. 1,65,000 கோடிகளை அதானி துறைமுகத்திலும், அதானி எண்டர்பிரைசிலும் முதலீடு செய்துள்ளது. இவையெல்லாம் மக்களின் பணமாகும். முறைகேடுகளை செபி அமைப்பானது கண்டுகொள்ளவில்லை. உச்சநீதிமன்றம் விவரங்களை கேட்டது. எதிர்கட்சிகள் விசாரணை கோரின. மோடி வெட்கமில்லாமல் அமைதியாக இருந்தார். அவருடைய நண்பரான அதானி நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். அவர் மேலும் பணக்காரராகி உள்ளார்.

கொரோனா காலத்தில் உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதி யில் ஊழல் நடந்துள்ளது. ரூ.12,700 கோடிகள் மூன்று ஆண்டு காலத்தில் வசூலிக்கப்பட்டுள்ளன. தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையின் படி 5516 கோடி ரூபாய்கள் இன்னமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் சொல்வது போல இது தனியார் தனியார் நிதியாகும். எனவே இதனை தணிக்கை செய்ய இயலாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது வராது. நிதி குறித்த விவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. பாராளுமன்றம் விவாதிக்கவில்லை. வெளிப்படைத் தன்மை இல்லை. இரகசியமகவும், தணிக்கைக்கு உட்படாமலும் இருப்பதால், இந்தத் தொகையானது பாஜகாவால் தேர்தலுக்காக செலவழிக்கப்பட்டிருக்கலாம்.

2015 – 2023 காலக்கட்டத்தில் 14.56 இலட்சம் கோடி ரூபாய் வாராக்கடனாக வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்தவை. இது வழக்கமான வங்கி நடைமுறை அல்ல. கார்பரேட் நிறுவனங்களுக்கு பகிரங்கமாக வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான கொள்ளையாகும்.

இவையெல்லாம் அடையாளமான ஊழல்களே. பாஜகவானது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சலுகை செய்துள்ளது. அதனால் பாஜக இலாபம் ஈட்டியுள்ளது. அதானி முந்த்ரா, எஸ்ஸார் சாலயா நொடித்துப் போகும் நிலையில் இருந்தனர். அவர்கள் பாஜகவின் தலையீட்டினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநில சட்ட திருத்தத்தின் மூலம் அதிக விலைக்கு கோடா துறைமுகமானது மின்சாரத்தை மாநில அரசுக்கு விற்றுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டல சட்டமானது அதானி மின் குழுமம் இலாபம் அடையும் வகையில் 2016 ல் திருத்தப்பட்டது. இவையெல்லாம் ஊழலைப் பற்றி சொல்லமுடியாத அளவுக்கு உதாரணங்களாகும். கார்ப்பரேட்டுகளுக்கும், அரசாங்கத்திற்கும் உள்ள உராய்வை போக்கும் வகையில் பணம் செயல்படுகிறது. இவை crony capitalism – ற்கான சிறந்த உதாரணமாகும். இது அபாயகரமானது. இது பொது வளங்களை கொள்ளை அடிக்கிறது.

மேலும் பல ஊழல்கள் இன்னமும் உள்ளன. அவை வெளிவரத் தொடங்கியுள்ளன. ஊழலானது வறுமையை ஆழமாக்குகிறது. மனித மாண்மையும், மனித உரிமையையும் சிதைக்கிறது. வளர்ச்சியை தடம்புரளச் செய்கிறது . ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அழிக்கிறது. பாஜக ஊழலில் மாட்டித் திளைக்கிறது.அரசாளும் தார்மீக பொறுப்பை அது இழந்துவிட்டது. பாஜக வீழ்த்தப்பட வேண்டும். முக்கியமான காலத்தில் கூடியிருக்கிற ஏஐடியுசி நிர்வாகக் குழுவானது, ஊழல் மலிந்த பாஜக அரசை தூக்கி எறிவவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என தீர்மானிக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அரசியல்

Published

on

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் திரும்பப்பெறுக – தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கை

ஜூலை ஒன்றாம் நாள் முதல் அமலாக்கப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.

இந்தச் சட்டங்கள் முறையான விவாதங்கள் இல்லாமல், பாராளுமன்ற குழு கொடுத்துள்ள பரிந்துரைகளைக் கூட கண்டுகொள்ளாமல், நகல் கொள்கையை பொதுவெளியில் வைக்காமல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

வெள்ளையர் கால சட்டங்களுக்குப் பதிலாக இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று சொல்லப்படுவது தவறாகும். ஏனெனில் பழைய சட்டங்களின் அனைத்துப் பிரிவுகளும் புதிய சட்டங்களில் உள்ளன; இன்னும் சொல்லப்போனானால் சில பிரிவுகள் கடுமையாகவும் உள்ளன.
உதாரணமாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 பிரிவு புதிய சட்டத்திலும் உள்ளது. அதற்கு மூன்று வருட சிறைத்தண்டனை என்பது ஏழு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் எப்படி ஒன்றுகூடினாலும், தலைவர்கள் ஒன்றுகூடினாலும் அவர்களை தீவிரவாதிகள் என்று சொல்ல முடியும். அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் இந்தப் பிரிவின்கீழ் கொண்டுவர முடியும்.

இவற்றின் பல பிரிவுகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. இது குழப்பத்தை உருவாக்குவதோடு, வழக்குகள் தேங்குவதை பெருமளவில் வருங்காலங்களில் அதிகரிக்கும். தற்போது கீழ்மட்ட நீதிமன்றங்களில் 6.4 கோடி வழக்குகள் சமாளிக்க முடியாத அளவுக்கு தேங்கியுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உருவான தீர்ப்பு வழிச்சட்டங்கள் (case law) புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கத்தினால், இனி பயனற்றுப் போகும். இதனால் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என அனைவரும் அரசியலமைப்பு முடிவுகளுக்கு வர போராட வேண்டி இருக்கும்.

காவல் ஆய்வாளர்களுக்கு முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய முழு அதிகாரமும்- அதாவது பதிவு செய்யலாமா என்ற விருப்பமும் – கொடுக்கப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்.

போலிஸ் காவலில் இருக்கும் காலமானது 15நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான வழியில் போராடுபவர்கள் மீதும், முற்றுகையிடும் (gherao) தொழிலாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இது ஆட்சிசெய்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடக்குமுறையை கையாள விரும்பும் காவல் அரசிற்கு (police raj) கட்டியம் சொல்வது போல உள்ளது.

தற்போது நடைமுறையில், நீதி வழங்குவதைக் குறிக்கும் சொல்லான “நீதி வழங்கும் நீதிமன்றம்” (Court of Justice) என்ற வரையறையானது “நீதிமன்றம்”(court) என்று மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே வாகன ஓட்டிகள் ‘மோதிவிட்டு ஓடிவிடும்’ (hit and run) வழக்குகளை எதிர்த்து போராடியதால் பின்னடைவு ஏற்பட்டது. அரசாங்கம் அந்தப் பிரிவுகளை அமலாக்கமாட்டோம் என கூறியது; ஆனால் அந்தப் பிரிவுகளை அவர்கள் நீக்கவில்லை.

இந்தி பேசாத மக்கள் இந்தியை திணிப்பதை எதிர்த்துள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 348 – ம், அரசு மொழிச் சட்டமும் பாராளுமன்றம், சட்டமன்றம் இயற்றுபவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், 2016 ல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போன்றதொரு முட்டாள்தனமான, அதைவிட அபாயகரமான நடவடிக்கையாகும். நவ தாராளவாத கொள்கைகளுக்கு இசைவான, மக்களின் உரிமைகள் மீது தாக்குதலைத் தொடுப்பதாகும்.

மத்திய தொழிற்சங்கங்கள், சுயேச்சையான சமரமேளனங்கள், சங்கங்களின் பொது மேடையானது, புதிய குற்றவியல் சட்டங்களை நீக்கிவிட்டு பழைய சட்டங்களே தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. புதிய மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டி இருப்பின் அதனை ஏற்றுக் கொண்டு அமலாக்குவதற்கு முன்பு பொதுவெளியில் விவாதிக்க வேண்டும்.

INTUC AITUC HMS CITU AIUTUC TUCC SEWA AICCTU LPF UTUC

Continue Reading

அரசியல்

குவைத்தில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்குகாப்பீடு வழங்குக

Published

on

குவைத் நாட்டில், தொழிலாளர் முகாமில் நடந்த தீ விபத்தில் இறந்துபோனவர்களுக்காக ஏஐடியுசியின் செயற்குழு தனது அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறையும், குவைத் நாட்டின் தூதரகமும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வெளிநாடாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலமை குறித்து கவனம் கொள்வது அவசியமானதாகும். தில்லியிலும் மற்ற இடங்களிலும் ஏற்பட்ட இத்தகைய தீ விபத்துகள், தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற பணிச்சூழலில் இருப்பதை கவலைகொள்ள வைக்கின்றன.

“எளிதாக தொழில் செய்வதற்காக” தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் துறை ஆய்வுகளை நீக்குவதைப் பற்றி ஏஐடியுசி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது.
 
இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மையின் காரணமாக, ஏதோ வேலைக்காக இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பணியிடங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் முனைப்பான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்; அவர்களை நிலையான வெளிநாட்டு செலாவணி தரும் வாய்ப்பாக பார்க்கக் கூடாது.

2021 க்கும் 2023 க்குமான காலத்தில் 16000 புகார்கள் கிடைக்கப்பெற்றதாக, கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
தாமதமாக வழங்கப்படும் சம்பளம், தங்கும் இடங்களில் இடர்பாடுகள், வேலை அளிப்பவரால் இடர்பாடுகள் போன்ற புகார்கள் வந்துள்ளன. இதே போல 2022 & 2023 ஆண்டுகளில் 1400 தொழிலாளர்கள் குவைத் நாட்டில் இறந்துபோனதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாயும், கடுமையாக ஊனமுற்றவர்களுக்கு ஐம்பது இலட்ச ரூபாயும் இழப்பீடாக தர வேண்டுமென ஏஐடியுசி கோருகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கொள்கை வேண்டும் எனவும், புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஏஐடியுசி கோருகிறது.

அமர்ஜித் கௌர்,
பொதுச் செயலாளர்,
ஏஐடியுசி

Continue Reading

அரசியல்

Published

on

2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஏஐடியுசி அறிக்கை

மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை நிராகரித்து , அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதியான நிலையெடுத்த மக்களை ஏஐடியுசி பாராட்டுகிறது.

இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த கருமேகங்களை சாதாரண உழைக்கும் மக்கள் அகற்றி உள்ளனர்.

உலகெங்கும் இருந்து கலாச்சாரத்தையும், பாரம்பரியங்களையும் உள்வாங்கிய, நமது பழைய சிந்து சமவெளி நாகரிகத்திற்கு ஏற்பட இருந்த பேரழிவில் இருந்து நாடு காப்பற்றப்பட்டுள்ளது. சர்வாதிகாரத்தின் ஆபத்தில் இருந்தும் வெறுப்புக் கலாசாரத்தில் இருந்தும், பிளவுபடுத்தும் சதிச்செயல்களில் இருந்தும் தமது தாய்நாட்டை மக்கள் காப்பாற்றி உள்ளனர்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையான விழுமியங்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், எதிர்க்கருத்திற்கான உரிமை, பேச்சுரிமை, அனைத்து மதங்களையும், மொழிகளையும், கலாச்சாரத்தையும் காப்பாற்ற வாக்களித்து உள்ளனர். சர்வாதிகாரிகளை எதிர்க்கவும், வீழ்த்தவும் முடியும் என்கிற மக்களின் நம்பிக்கை அதிகரித்து உள்ளது.

தொழிலாளர்கள் – விவசாயிகளின் பிரச்சினைகள், இளைஞர்களுக்கு வேலையின்மை, கல்வி பெறும் உரிமை, எளிய மக்களின் அடிப்படை உரிமைகளான குடியிருப்பு, குடிநீர், சுகாதார வசதி, பெண்களுக்கான நீதி -கண்ணியம் போன்ற முக்கியமான பிரச்சினைகளை தவிர்க்க மோடி அரசு மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. பிளவுபடுத்தும் பேச்சுக்கள், பொய்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தியும், அடியாள் பலம் , பண பலம் மூலமாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்த்து, தங்களுக்கு இசைவான அரசுகளை நிறுவும் மோடி அரசின் தந்திரங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுத்துறைகளையும் அரசுத்துறைகளையும் பாதுகாப்பது, தொழிலாளர் விவசாயிகளுக்கு இடையில் ஒற்றுமையை பலப்படுத்துவது, முறைசாரா தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது, வேலை வாய்ப்பை உருவாக்குவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கான போராட்டங்களை தீவிரமாக நடத்தி, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஏஐடியுசி தொழிலாளர் வர்க்கத்தைக் கேட்டுக் கொளகிறது. அதாவது ஆகஸ்டு 2022 ல் நடைபெற்ற விவசாயிகள்- தொழிலாளர் மாநாட்டுத் தீர்மானங்களுக்காக தொடர்ந்து வெற்றி பெறும் வரை போராட வேண்டும்.

ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கம் இதில் தீர்மானமான பங்காற்றியுள்ளது. நாட்டின் நலன், மக்கள் நலன் மேம்பட ஒன்று பட்ட தொழிலாளர், விவசாயிகள் இயக்கம் மேலும் வலுப்பெற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐடியுசி தேசிய செயற்குழு
5.6.2024

Continue Reading

Trending

Copyright © 2022 Tamilnadu AITUC. Developed by : Marxist Info Systems, Coimbatore.