Connect with us

Uncategorized

பாலஸ்தீனம்: இரு நாடுகள் கொள்கைக்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும்

Published

on

இதுவரை 32,000 பாலஸ்தீன மக்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாடானது போர்நிறுத்த முயற்சிகளை ஒப்புக்கொள்ளவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டிலேயே, 85% ற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் காசா பகுதியில் இடம்பெயர்ந்து உள்ளனர். எட்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் வீடிழந்து தெருக்களில் உள்ளனர். வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் தரைமட்டமாகி உள்ளன. பாலியல் அத்துமீறல்கள் நடைபெற்று வருகின்றன.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழு, இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை, நிறைவேற்ற முடியவில்லை. ஐக்கியநாடுகள் சபை ரஷ்யாவிற்குச் செய்தது போல, இஸ்ரேலுக்கு எதிரான பொருளாதாரத் தடையை விதிக்கவில்லை. போர்க் குற்றங்களை விசாரிக்கவில்லை. அமெரிக்காவும், அதன் ஐரோப்ப கூட்டாளிகளும், இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக ஐநாவிற்கு அழுத்தங்களைத் தருகின்றன. ஐநாவில் இருந்து வரும் உதவிகளை காசா பகுதியில் தருவதை இஸ்ரேல் தடுக்கிறது. இவை அப்பட்டமாக சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானதாகும்.

ரமதான் நோன்பின் முதல் நாளில் 67 இறந்த உடல்கள் வந்துள்ளன. உடனடியான போர் நிறுத்தத்திற்கு ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி கோருகிறது.

போர் நடந்து கொண்டிருக்கும் போதே, சூயஸ் கால்வாய்க்கு போட்டியாக, பென் குரியன் கால்வாய்த் திட்டத்தை (Ben Gurion Canal Project of 1960) மீண்டும் திறப்பதற்கான பேச்சுக்களைத் தொடங்கியுள்ளனர். அரபு நாடுகளுக்கு எதிரான மேலாதிக்கத்தை காட்ட விரும்பும் ஏகாதிபத்திய நாடுகளே இதற்கு காரணமாகும்.

, தென் ஆப்பிரிக்க குடியரசு, இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்த வழக்கில், சர்வதேச நீதிமன்றம் கொடுத்துள்ள இடைக்கால உத்தரவை ஏஐடியுசி வரவேற்கிறது. ஆனால் இந்த உத்தரவை இஸ்ரேல் அமலாக்கவில்லை. இதற்காக சரவதேச நீதிமன்றம் இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்க வேண்டும்.

இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுசபையில், 1947 ல், பாலஸ்தீனத்தை பிரிப்பதை எதிர்த்து இந்தியா வாக்களித்தது. PLO, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான அமைப்பு என்பதை அரபுநாடுகளைத் தவிர்த்து, முதலில் அங்கீகரித்த நாடு இந்தியா. 1988 ல் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நிரந்தரத் தீர்விற்கு, இரண்டு நாடுகள் கொள்கையை ஐநா ஏற்றுக்கொள்ள இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கெனவே ஏஐடியுசி தீர்மானம் இயற்றி உள்ளது.
இந்திய தொழிலாளர்களை, பாலஸ்தீன தொழிலாளர்களுக்குப் பதிலாக இஸ்ரேல் நாட்டிற்கு எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் இந்தியா அனுப்புவதை ஏஐடியுசி கடுமையாக கண்டிக்கிறது. எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் போர் நடக்கும் பகுதிகளுக்கு இந்திய தொழிலாளர்களை அனுப்பும் நிலை உள்ளது. வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு கூட இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்பப்படுவர்களுக்கு இல்லை.

பாலஸ்தீன தொழிலாளர்களுக்கும் இந்திய தொழிலாளர்களுக்கும் நிலவும் பிணைப்பை ஏஐடியுசி விதந்தோதுகிறது. ‘இரண்டு நாடுகள் தீர்வு” என்பதற்கு எங்கள் உறுதியான ஆதரவை நல்குகிறோம். 1967 க்கு முன்பு இருந்த எல்லைகளின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலேம் நகரைத் தலைநகரமாகக் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடு அமைக்கப்பட வேண்டும். இஸ்ரேல் நாட்டின் மீது தடைகள் விதிக்கப்பட வேண்டும், அது நடத்திய போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என ஏஐடியுசி கோருகிறது. சர்வதேச தொழிலாளர் ஒற்றுமையை உருவாக்க ஏஐடியுசி உறுதி கொள்கிறது. ஐக்கிய நாடுகள் சபையானது அமைதியை மீண்டும் கொண்டுவரவும், பாலஸ்தீனத்தையும், அதன் அரசுரிமையையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் ஏஐடியுசி வேண்டுகோள் விடுக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

முன்கூட்டியே செலுத்தும் சீர்மிகு மீட்டர் கொள்கையை கைவிடு

Published

on

இந்தியா முழுவதும் 25 கோடி சீர்மிகு மீட்டர் (smart meter) நிறுவும் கொள்கை அமலாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு 60 சத நிதியையும், மாநில அரசுகள் மீதித்தொகையையும், மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு (Discoms) தர வேண்டும். பெருநிறுவனங்களின் கோரிக்கைப்படி சீர்மிகு மீட்டர்கள் பொறுத்தும் திட்டம் அமலாக்கப்படுகிறது. இதனால் மின்சாரத்துறையில், இலாபம் வரும் பகுதியை தனியாருக்கு அளிக்க உள்ளனர்.

தனியார் பெருநிறுவனங்கள் மின் உற்பத்தி, பகிர்மானம், விநியோகம் என அனைத்தையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரும்புகின்றனர். மின்சாரத்திற்கு தரப்படும் எல்லாவித மானியத்தையும் நிறுத்த விரும்புகின்றனர். சீர்மிகு மீட்டர் அமலானால், முன்னதாகவே பணத்தை கட்டினால்தான் மின்சாரம் கடைக்கும். நுகர்வோர், அரசாங்கத்தின் பணத்தைக்கொண்டு, தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்வதே முதலாளிகளின் நோக்கமாகும். மின் கட்டணம் வருடம்தோறும் நிர்ணயிக்கப்படும். இதனால் மின்சாரம் அடிப்படை தேவை என்ற நிலையில் இருந்து மாறி, இலாப நோக்கிலேயே செயல்படும். தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் 20,000 தொழிலாளர்களும், மகாராஷ்டிரா வில் 30,000 தொழிலாளர்களும் வேலை இழப்பர். சீர்மிகு மீட்டர் திட்டத்தை, மின்சார தொழிலாளர்கள், நுகர்வோர், பொதுமக்களோடு இணைந்து எதிர்த்து வருகிறார்கள்.

மக்கள் விரோத, மாநில அரசுகளுக்கு விரோதமான, பெரு நிறுவனங்கள் பலன் அடையும் வகையில் 2022 ல் மின் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. மின் விநியோகத்தில் பல வகைகளில் தனியாருக்கு உரிமம் வழங்குவதற்கு இது வழிவகை செய்தது. இதனால் மின்சாரம் தனியார்மயமாகும். தொழிலாளர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு காரணமாக அது சட்டமாகவில்லை. இதிலுள்ள பிரிவுகள் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளன. மின்சாரம் விநியோகம் செய்பவர்கள் இதில் முதலீடு ஏதும் செய்யப்போவதில்லை.

நுகர்வோருக்கு விரோதமான, தேச விரோதமான, மாநில உரிமைகளைப் பறிக்கும் காட்டுமிராண்டி மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். தனியார்மயத்தை எதிர்த்து போராடும் 15 இலடசம் மின் தொழிலாளர்களுக்கு ஏஐடியுசி தனது ஆதரவை நல்குகிறது.

Continue Reading

Uncategorized

Published

on

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தொடர்ந்து எதிர்க்கிறோம்

குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA), தேசிய மக்கள் தொகைப் பதிவேடு(NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC) ஆகியவற்றை அமலாக்க, பாஜக செய்யும் அனைத்து முயற்சிகளை எதிர்க்க ஏஐடியுசி உறுதி கொள்கிறது. மார்ச்சு 2024 முதல் குடியுரிமை திருத்த சட்டம் 2019 அமலுக்கு வந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இசுலாமிய சிறுபான்மையினரை மட்டும் ஒடுக்குவதற்காக கொண்டுவரப்படவில்லை. இதனால் இந்தியா முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான வீடற்றவர்களும் பாதிப்பு அடைவர். வீடற்ற 99 % மக்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. இவர்கள் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஆவார்கள். வீடற்ற 30 % மக்களுக்கு எந்தவித அடையாளச் சான்றும் இல்லை என்று சொல்லப்படுகிறது. கிராமப்புற நெருக்கடியால் இடம்பெயரும் பழங்குடி, நாடோடி, புலம்பெயர்ந்த மக்களிடம் தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு தருவதற்கு தேவையான ஆவணம் ஏதும் இருப்பதில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு முன்னோட்டமாக செய்யப்படுவதாகும். நிரூபிக்கப்படும் வரை இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேறிகள் என்ற எண்ணத்தில் பாஜக இந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இது அரசியலமைப்பின் மீதும், 1955 ஆம் ஆண்டின் இந்திய குடியுரிமைச் சட்டத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகள் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளன; இதன் வழியாக மக்கள்தொகை விவரங்களையும், உயிரியளவியல் (Bio metric) விவரங்களையும் பாஜக சேகரித்து கண்காணிப்பிற்குள் வைத்துக்கொள்ள இருக்கிறது.

பாஜக ஆட்சியில் இருந்த போது 2003 ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒவ்வொரு குடிமகனும் தன்னை பதிவு செய்துகொள்ள வேண்டும்; தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது. இதனால் மக்கள் தொகை பதிவேடு உருவாக சட்டப்பூர்வமான ஏற்பாடு வந்தது; இது மக்கள் தொகை கணக்கீட்டோடும், தேசிய குடிமக்கள் பதிவேட்டோடும் இணைக்கப்பட்டது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு நாடு முழுவதும் வந்த எதிர்ப்பின் காரணமாக, தேசிய மக்கள் தொகை பதிவேட்டையும், குடிமக்கள் பதிவேட்டையும் நிறுத்தி வைத்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் இசுலாமிய சிறுபான்மையினருக்கு குடியுரிமையை மறுக்கிறது; அதே சமயம் முஸ்லிம் அல்லாத சட்டவிரோத குடியேறிகளை பாதுகாக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு காட்டுமிராண்டித்தனமானவை; அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவையாகும்.

மதம், சாதி, இனம், வகுப்பு அடிப்படையில் மக்களை நசுக்கும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் ஏஐடியுசி எதிர்க்கிறது.

Continue Reading

Uncategorized

தொழிற்சங்கங்களை வில்லன்களாக பார்க்காதீர்!

Published

on

சில நாட்களுக்கு முன்னர் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் கைது செய்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை நடுக்கடலில் தாக்கி கைது செய்யும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது. ஒன்றிய அரசு உரிய தீர்வு காண தயாராக இல்லை.
மற்றொருபுறம் கடந்த சில ஆண்டுகளாக மீனவர்களுக்கு மீன்பாடு இல்லை. மீன்களுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் பல மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி இரான் நாட்டிற்கு ராமநாதபுரம் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட இந்தியாவிலிருந்து ஒப்பந்த தொழிலாளர்களாக இரானுக்கு சென்றனர்.

மோசமான வேலை சூழல் காரணமாக உரிமையாளரின் படகை பயன்படுத்தி .இரான் நாட்டிலிருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலமாகவே 3,500 கிமீ தூரத்தை கடந்து 14 நாட்கள் கடலில் பயணித்து தப்பி வந்து சேர்ந்தனர். தப்பமுடியாமல் பலப் பல தொழிலாளர்கள் என்ன பாடு படுகிறார்களோ!

நான்கு தலைமுறையாக வேலை பார்த்துவந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் 700 குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்ந்த வீடு, வேலைபார்த்த நிலம், படித்த பள்ளி, முன்னோர்களின் கல்லறைகள், சக தொழிலாளர்களுடனான உறவு என எல்லாவற்றின் மீதும் ஒரு விலக்க முடியாத திரை விழுந்து, சொந்த நாட்டில் அறிவிக்கப்படாத அகதிகளாக்கப் பட்டுள்ளனர்.

வேலை தேடி குவைத் நாட்டுக்கு சென்ற தொழிலாளர்கள் 50 பேர் தீ விபத்தில் கரிக்கட்டைகளாகி பெட்டியில் அடைத்து சடலங்களாக வந்தனர். சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அரசு மது பானக்கடைகளில் சமூக விரோதிகள் தாக்குதலால் உயிரிழப்புகளும், கொடும் காயங்களும் தொடர்கதையாகும். இது போன்ற எண்ணற்ற இன்னல்களுடன் தொழிலாளர்கள் வாழ்வு!
கள்ளக்குறிச்சியில் 120 ரூபாய் கொடுத்து அரசு மதுபானக் கடையில் மது வாங்க முடியாத தொழிலாளர்கள் கள்ள சந்தை மதுவை பயன்படுத்தி வந்ததால் 58 பேர் உயிரழந்து அவர்கள் குடும்பம் நிர்க்கதியாக்கப்பட்டுள்ள நிலையும் தொடர்கதை!
இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மையின் காரணமாக, ஏதோ வேலைக்காக இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் பாதுகாப்பற்ற வேலை, உத்தரவாதமில்லாத வாழ்க்கை என்னும் நிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் தொழிற்சங்கங்களை வில்லன்களாக பார்க்க வேண்டாம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை பிரதிபலிக்கட்டும் என்று ஒன்றிய நிதியமைச்சரிடம் மத்திய தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.
வளர்ச்சியின் நாயகர்களான தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஒன்றிய, மாநில அரசுகள் யாருக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றன என்று இந்திய தொழிலாளி வர்க்கம் உரத்துக் கேட்கட்டும்.

= ம.இராதாகிருஷ்ணன்

Continue Reading

Trending

Copyright © 2022 Tamilnadu AITUC. Developed by : Marxist Info Systems, Coimbatore.