Connect with us

அரசியல்

பாசிசத்திற்கு எதிரான போராட்டம் முடியாது

Published

on

1945, மே 9 ம் நாளில்தான், ஹிட்லரின் ஜெர்மனியானது, நிபந்தனையின்றி சோவியத் ஒன்றியத்தின் செம்படையிடமும், நேச நாடுகளிடமும் சரணடைந்தது. இதனால் இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தது. பெருமளவிலான உயிரிழப்பிற்குப் பிறகு பாசிசம் தோற்கடிக்கப்பட்டது. அதுமுதலாக, உலகம் முழுவதும் பாசிசத்திற்கு எதிரானவர்கள் மே 9 ம் நாளை பாசிசத்திற்கு எதிரான நாளாக கடைபிடித்து வருகிறார்கள்.

பாசிசம் என்றால் என்ன ? நாம் எங்கேயோ தேட வேண்டியதில்லை. இந்தியாவில், நம்மைச் சுற்றியே அதற்கான வேர்கள் உள்ளன. பாசிசம் என்பது கருத்துச் சொல்லும் உரிமையையும், நம்பிக்கையும், எண்ணத்தையும் ஏற்றுக் கொள்ளாதது ஆகும். இது மேலாதிக்க கருத்தியலில் வளர்கிறது. இது சாதாரண மக்களை அடிமை மனோபாவத்தை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. சர்வாதிகாரியை பின்பற்றுவதை பெருமைகொள்ள வைக்கிறது. ‘மற்றவர்களால்’ ஆபத்து வருகிறது என எளிய மக்களை நம்ப வைப்பதன் மூலம் பாசிசம் வளர்கிறது. எளிய மக்கள் தங்கள் சுதந்திரத்தை நாட்டிற்காகவும், தந்தையர் நாட்டிற்காகவும், தாய்நாட்டிற்காகவும், தேசத்திற்காகவும் (Rashtra) பலிகொடுப்பதை பெருமை என நம்பி ஏற்றுக்கொள்ள வைக்கிறது.

எனவே, மே 9 ம் நாளானது, பாசிசத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நினைவூட்ட வேண்டிய நாளாகும். அது ஒரு முறை தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆனால் அது நம்மை மீண்டும் பீடிக்காமல் இருக்க நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஆர்எஸ்எஸூம் அதனுடைய எண்ணற்ற கிளைகளும் இந்தியாவில் பாசிசத்தை முன்னெடுப்பவர்கள் ஆவார்கள். அதனுடைய அமைப்பாளர்கள், இத்தாலி நாட்டின் முசோலினி, ஜெர்மனி நாட்டின் ஹிட்லர் ஆகியோருடன் தொடர்பில் இருந்தார்கள். அவர்களின் ‘ஒழுக்கமான’ வழித்தோன்றல்களை கண்டு ஈர்க்கப்பட்டார்கள். டாக்டர். மூஞ்சே, ஹெட்டேவர், கோல்வாக்கர், சவர்க்கர் ஆகியோர் இந்துத்துவாவையும், இந்து ராஷ்டிராவையும் இங்கு பரப்பினர்.
மற்ற மத நம்பிக்கை கொண்ட முக்கியமாக இஸ்லாம் ஆட்சியாளர்களால் இந்துக்கள் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டனர் என்று சொல்லி வரலாற்றை திரித்தனர். ( இந்தியாவிற்கு வந்த முகலாயர்கள் மதத்தை பரப்ப வரவில்லை. இங்குள்ள பண்பாட்டோடு இசுலாமியர்கள் கலந்துபோனார்கள் என்ற உண்மையை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை) மனுஸ்மிருதி பெண்களுக்கு எதிராக வெளிப்படையாக பேசுகிறது. தாழ்ந்த சாதியினர் என்று சொல்லப்படுபவர்களுக்கு எதிராக உள்ளது. பார்ப்பனர்களை உயர்ந்த சாதியினராக சித்தரிக்கிறது. இந்த மனுஸ்மிருதியைத்தான் அவர்கள் வழிநடத்தும் சட்டமாக கருதுகிறார்கள். இன்று அவர்கள் கல்வி, குடிமைப்பணி, நீதித்துறை, காவல், இராணுவம் என எல்லா துறைகளிலும் நிதி மூலதனத்தின் மௌனமான ஆதரவோடு வேரூன்றி உள்ளனர்.

இப்போஏது, நமது முன்னோர்கள் வகுத்துத் தந்த அரசமைப்பின்படி பாராளுமன்ற தேர்தல்களை நடத்திக் கொண்டு இருக்கிறோம். ஆர்எஸ்எஸின் அரசியல் பிரிவான பாஜக தேர்தலில் பங்குபெற்றுள்ளது. ஆரம்பத்தில் அவர்கள் அரசியல் அமைப்பு உரிமையை “வெளிநாட்டு சிந்தனை” என ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள்தான். அவர்கள் மனுஸ்மிருதியை நமது அரசில் சட்டமாக வேண்டும் என பேசியவர்கள். பாராளுமன்ற தேர்தலில் சாம, பேத, தான, தண்ட முறைகள் மூலமாக தேர்தல் முடிவுகளை மாற்ற நினைக்கிறார்கள். இந்த யுத்தியின் மூலமாகவே அரசியல் கட்சிகளை உடைத்து அதிகாரத்தை கைப்பற்றினர்கள். அவர்கள்தான் இந்தியாவில் பாசிசத்திற்கான விதைகள் ஆவார்கள்.

தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளன. பாசிச எதிர்ப்பு சக்திகள், பாஜக- ஆர்எஸ்எஸை தோற்கடிக்க வேண்டும் என பரவலாக மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளன.

தேர்தல் முடிவுகளை யாராலும் கணிக்க முடியாது. முடிவு எப்படி இருந்தாலும், மே 9 ம் நாளானது பாசிசத்திற்கு எதிரான நாள் என்பதை நாம் நினைவில் கொள்ளுவோம். பாசிசத்திற்கு எதிரான போராட்டம் எப்போதும் முடியாது. எல்லா நேரங்களிலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

– ஏஐடியுசி செயற்குழு. 9.5.2024

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அரசியல்

Published

on

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் திரும்பப்பெறுக – தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கை

ஜூலை ஒன்றாம் நாள் முதல் அமலாக்கப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.

இந்தச் சட்டங்கள் முறையான விவாதங்கள் இல்லாமல், பாராளுமன்ற குழு கொடுத்துள்ள பரிந்துரைகளைக் கூட கண்டுகொள்ளாமல், நகல் கொள்கையை பொதுவெளியில் வைக்காமல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

வெள்ளையர் கால சட்டங்களுக்குப் பதிலாக இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று சொல்லப்படுவது தவறாகும். ஏனெனில் பழைய சட்டங்களின் அனைத்துப் பிரிவுகளும் புதிய சட்டங்களில் உள்ளன; இன்னும் சொல்லப்போனானால் சில பிரிவுகள் கடுமையாகவும் உள்ளன.
உதாரணமாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 பிரிவு புதிய சட்டத்திலும் உள்ளது. அதற்கு மூன்று வருட சிறைத்தண்டனை என்பது ஏழு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் எப்படி ஒன்றுகூடினாலும், தலைவர்கள் ஒன்றுகூடினாலும் அவர்களை தீவிரவாதிகள் என்று சொல்ல முடியும். அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் இந்தப் பிரிவின்கீழ் கொண்டுவர முடியும்.

இவற்றின் பல பிரிவுகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. இது குழப்பத்தை உருவாக்குவதோடு, வழக்குகள் தேங்குவதை பெருமளவில் வருங்காலங்களில் அதிகரிக்கும். தற்போது கீழ்மட்ட நீதிமன்றங்களில் 6.4 கோடி வழக்குகள் சமாளிக்க முடியாத அளவுக்கு தேங்கியுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உருவான தீர்ப்பு வழிச்சட்டங்கள் (case law) புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கத்தினால், இனி பயனற்றுப் போகும். இதனால் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என அனைவரும் அரசியலமைப்பு முடிவுகளுக்கு வர போராட வேண்டி இருக்கும்.

காவல் ஆய்வாளர்களுக்கு முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய முழு அதிகாரமும்- அதாவது பதிவு செய்யலாமா என்ற விருப்பமும் – கொடுக்கப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்.

போலிஸ் காவலில் இருக்கும் காலமானது 15நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான வழியில் போராடுபவர்கள் மீதும், முற்றுகையிடும் (gherao) தொழிலாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இது ஆட்சிசெய்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடக்குமுறையை கையாள விரும்பும் காவல் அரசிற்கு (police raj) கட்டியம் சொல்வது போல உள்ளது.

தற்போது நடைமுறையில், நீதி வழங்குவதைக் குறிக்கும் சொல்லான “நீதி வழங்கும் நீதிமன்றம்” (Court of Justice) என்ற வரையறையானது “நீதிமன்றம்”(court) என்று மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே வாகன ஓட்டிகள் ‘மோதிவிட்டு ஓடிவிடும்’ (hit and run) வழக்குகளை எதிர்த்து போராடியதால் பின்னடைவு ஏற்பட்டது. அரசாங்கம் அந்தப் பிரிவுகளை அமலாக்கமாட்டோம் என கூறியது; ஆனால் அந்தப் பிரிவுகளை அவர்கள் நீக்கவில்லை.

இந்தி பேசாத மக்கள் இந்தியை திணிப்பதை எதிர்த்துள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 348 – ம், அரசு மொழிச் சட்டமும் பாராளுமன்றம், சட்டமன்றம் இயற்றுபவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், 2016 ல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போன்றதொரு முட்டாள்தனமான, அதைவிட அபாயகரமான நடவடிக்கையாகும். நவ தாராளவாத கொள்கைகளுக்கு இசைவான, மக்களின் உரிமைகள் மீது தாக்குதலைத் தொடுப்பதாகும்.

மத்திய தொழிற்சங்கங்கள், சுயேச்சையான சமரமேளனங்கள், சங்கங்களின் பொது மேடையானது, புதிய குற்றவியல் சட்டங்களை நீக்கிவிட்டு பழைய சட்டங்களே தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. புதிய மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டி இருப்பின் அதனை ஏற்றுக் கொண்டு அமலாக்குவதற்கு முன்பு பொதுவெளியில் விவாதிக்க வேண்டும்.

INTUC AITUC HMS CITU AIUTUC TUCC SEWA AICCTU LPF UTUC

Continue Reading

அரசியல்

குவைத்தில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்குகாப்பீடு வழங்குக

Published

on

குவைத் நாட்டில், தொழிலாளர் முகாமில் நடந்த தீ விபத்தில் இறந்துபோனவர்களுக்காக ஏஐடியுசியின் செயற்குழு தனது அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறையும், குவைத் நாட்டின் தூதரகமும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வெளிநாடாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலமை குறித்து கவனம் கொள்வது அவசியமானதாகும். தில்லியிலும் மற்ற இடங்களிலும் ஏற்பட்ட இத்தகைய தீ விபத்துகள், தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற பணிச்சூழலில் இருப்பதை கவலைகொள்ள வைக்கின்றன.

“எளிதாக தொழில் செய்வதற்காக” தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் துறை ஆய்வுகளை நீக்குவதைப் பற்றி ஏஐடியுசி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது.
 
இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மையின் காரணமாக, ஏதோ வேலைக்காக இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பணியிடங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் முனைப்பான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்; அவர்களை நிலையான வெளிநாட்டு செலாவணி தரும் வாய்ப்பாக பார்க்கக் கூடாது.

2021 க்கும் 2023 க்குமான காலத்தில் 16000 புகார்கள் கிடைக்கப்பெற்றதாக, கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
தாமதமாக வழங்கப்படும் சம்பளம், தங்கும் இடங்களில் இடர்பாடுகள், வேலை அளிப்பவரால் இடர்பாடுகள் போன்ற புகார்கள் வந்துள்ளன. இதே போல 2022 & 2023 ஆண்டுகளில் 1400 தொழிலாளர்கள் குவைத் நாட்டில் இறந்துபோனதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாயும், கடுமையாக ஊனமுற்றவர்களுக்கு ஐம்பது இலட்ச ரூபாயும் இழப்பீடாக தர வேண்டுமென ஏஐடியுசி கோருகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கொள்கை வேண்டும் எனவும், புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஏஐடியுசி கோருகிறது.

அமர்ஜித் கௌர்,
பொதுச் செயலாளர்,
ஏஐடியுசி

Continue Reading

அரசியல்

Published

on

2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஏஐடியுசி அறிக்கை

மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை நிராகரித்து , அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதியான நிலையெடுத்த மக்களை ஏஐடியுசி பாராட்டுகிறது.

இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த கருமேகங்களை சாதாரண உழைக்கும் மக்கள் அகற்றி உள்ளனர்.

உலகெங்கும் இருந்து கலாச்சாரத்தையும், பாரம்பரியங்களையும் உள்வாங்கிய, நமது பழைய சிந்து சமவெளி நாகரிகத்திற்கு ஏற்பட இருந்த பேரழிவில் இருந்து நாடு காப்பற்றப்பட்டுள்ளது. சர்வாதிகாரத்தின் ஆபத்தில் இருந்தும் வெறுப்புக் கலாசாரத்தில் இருந்தும், பிளவுபடுத்தும் சதிச்செயல்களில் இருந்தும் தமது தாய்நாட்டை மக்கள் காப்பாற்றி உள்ளனர்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையான விழுமியங்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், எதிர்க்கருத்திற்கான உரிமை, பேச்சுரிமை, அனைத்து மதங்களையும், மொழிகளையும், கலாச்சாரத்தையும் காப்பாற்ற வாக்களித்து உள்ளனர். சர்வாதிகாரிகளை எதிர்க்கவும், வீழ்த்தவும் முடியும் என்கிற மக்களின் நம்பிக்கை அதிகரித்து உள்ளது.

தொழிலாளர்கள் – விவசாயிகளின் பிரச்சினைகள், இளைஞர்களுக்கு வேலையின்மை, கல்வி பெறும் உரிமை, எளிய மக்களின் அடிப்படை உரிமைகளான குடியிருப்பு, குடிநீர், சுகாதார வசதி, பெண்களுக்கான நீதி -கண்ணியம் போன்ற முக்கியமான பிரச்சினைகளை தவிர்க்க மோடி அரசு மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. பிளவுபடுத்தும் பேச்சுக்கள், பொய்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தியும், அடியாள் பலம் , பண பலம் மூலமாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்த்து, தங்களுக்கு இசைவான அரசுகளை நிறுவும் மோடி அரசின் தந்திரங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுத்துறைகளையும் அரசுத்துறைகளையும் பாதுகாப்பது, தொழிலாளர் விவசாயிகளுக்கு இடையில் ஒற்றுமையை பலப்படுத்துவது, முறைசாரா தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது, வேலை வாய்ப்பை உருவாக்குவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கான போராட்டங்களை தீவிரமாக நடத்தி, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஏஐடியுசி தொழிலாளர் வர்க்கத்தைக் கேட்டுக் கொளகிறது. அதாவது ஆகஸ்டு 2022 ல் நடைபெற்ற விவசாயிகள்- தொழிலாளர் மாநாட்டுத் தீர்மானங்களுக்காக தொடர்ந்து வெற்றி பெறும் வரை போராட வேண்டும்.

ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கம் இதில் தீர்மானமான பங்காற்றியுள்ளது. நாட்டின் நலன், மக்கள் நலன் மேம்பட ஒன்று பட்ட தொழிலாளர், விவசாயிகள் இயக்கம் மேலும் வலுப்பெற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐடியுசி தேசிய செயற்குழு
5.6.2024

Continue Reading

Trending

Copyright © 2022 Tamilnadu AITUC. Developed by : Marxist Info Systems, Coimbatore.