எல் & டி சுப்பிரமணியம் 90 மணி நேர வேலைப் பரிந்துரை ஏஐடியுசியின் வன்மையான கண்டணம்
10.01.2025 இன்று ஏஐடியுசி விடுத்துள்ள அறிக்கை:
எல் & டி சுப்பிரமணியம் 90 மணி நேர வேலைப் பரிந்துரை
ஏஐடியுசியின் வன்மையான கண்டணம்
நிச்சயமாக, அனைத்து வேலை நேரங்களும் இந்தியாவை உருவாக்க தேவை தான். ஆனால் பொங்கி எழும் வேலையின்மை பற்றி என்ன? சமீபத்திய ஆய்வுகளின்படி வேலையின்மை மிக அதிகமாக உள்ளது. அதனால் இளமை ஆற்றல் வீணாகிறது! சுப்ரமணியமும், மூர்த்தியும் இவ்வாறு இளமை ஆற்றல் வீணாவது பற்றி எதுவும் சொல்லவில்லை.
சுப்ரமணியம், மூர்த்தி, அதானி ஆகியோர் தேசத்திற்காக தொழிலாளர்களிடம் இருந்து நிச்சயமாக அதிகமாக விரும்புகிறார்கள். எல் & டி இன் சுப்பிரமணியம், தேசத்தைக் கட்டியெழுப்ப அவர் செய்வதைப்போல தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட வாரத்தில் 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். அவர் கூறுவது இன்ஃபோசிஸின் மூர்த்தி சொன்னதற்கு ஒப்பானதாகும்.
வாரத்தில் 48 மணி வேலை நேரத்தில், தற்போதைய தொழிலாளர்கள் எந்தச் செல்வத்தை உருவாக்கினாலும், அதானிகள், அம்பானிகள், சோக்ஸிகள் மற்றும் நீரவ் மோடிகள் போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்களும் உருவாக்கப்படும் செல்வத்தை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அநாகரீகமான இடைவெளி அதிகரித்து, 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை எட்டியுள்ளது.
இந்த ஹோன்ச்சோக்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை அழகற்றவர்களாகக் கண்டால் அது தனிப்பட்ட விஷயம். ஆனால், 138 ஆண்டுகளுக்கு முன்பு, 19 ஆம் நூற்றாண்டில் “8 மணிநேர வேலை, 8 மணிநேர குடும்ப வாழ்க்கை மற்றும் 8 மணிநேர சமூக வாழ்க்கை” என்ற கோரிக்கையை வென்றடைய உழைத்த தொழிலாளி வர்க்கம் இரத்தத்தை சிந்தியது. தொழிலாளி வர்க்கத்தின் அத்தகைய இரத்தத்தின் காரணமாக பெற்ற உரிமைகள் என்பதை ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட்டுகள் மறந்துவிடக் கூடாது.
சுப்ரமணியம் கூறுகின்ற 90 மணி நேர வேலைப் பரிந்துரையை ஏஐடியுசி வன்மையாகக் கண்டிக்கிறது.
அமர்ஜித் கவுர்,
பொதுச்செயலாளர்,
ஏஐடியுசி