அறிக்கை

வேலைவாய்ப்பை உருவாக்குக

Published

on

மோடி 2014 ல் பதவியேற்கும்போது இருந்த வேலையின்மை விகிதம் 5.44 ஆகும். தற்போது வேலையின்மை வீதம் 9.2 ஆக உயர்ந்துள்ளது. குறித்த கால வேலை, வெளிச்சந்தை முறை, தினக்கூலி முறை மூலமாக சுரண்டல்முறை நடக்கிறது.

கேரள மாநிலத்தில் பொதுத்துறைகள பாதுகாப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக உள்ளது. அங்குதான் நாட்டிலேயே குறைந்தபட்ச ஊதியம், அதிகமாக வழங்கப்படுகிறது. கேரள அரசாங்கமானது பாரம்பரிய தொழில்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கிறது. சிறு குறுதொழில்களுக்கு இசைவாக அங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

காலியாக உள்ள 10 இலட்சம் பணியிடங்களை நிரப்புதல், உற்பத்தி & சேவைத்துறைகளை வலுப்படுத்துதல், வெளிச்சந்தை, ஒப்பந்த வேலைமுறைகளை ஒழித்தல், நிரந்தர வேலைவாய்ப்பை உள்ளடக்கிய பயிற்சியாளர் முறைகளை தனியார் நிறுவனங்கள் செயல்படுத்துதல், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு; குறைந்த பட்சி ஊதியத்தோடு 200 வேலைநாட்களாக அதிகரித்தல்; 43 வது இந்திய தொழிலாளர் மாநாட்டு தீர்மானப்படி நகரங்களுக்கும் விரிவுபடுத்துதல், அதிக மூலதனத்தை ஊக்குவிக்கவும், புதிய நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகையை அதிகரித்தல், அதிக வேலைகளைத் தரும் வகையில் பலவகையான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை ஒருங்கிணைத்தல், வேலை நேரத்தை குறைத்து அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல், இயந்திரமயமாக்கல், தானியங்கிகள், செயற்கை நுண்ணறிவு போன்றவைகளினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மற்ற எல்லா துறைகளை விட அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பைத் தரும், உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும் விவசாயத்துறைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இந்திய அரசாங்கமானது வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு உயர் முக்கியத்துவம் தந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி கோருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version