அரசியல்

ஊழலில் திளைக்கும் பாஜவை தோற்கடிப்பீர் -இந்தியாவைக் காப்பீர்

Published

on

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக , புது தில்லியில், மார்ச்சு 16,17 தேதிகளில் நடைபெறும் ஏஐடியுசியின் நிர்வாகக்குழுவானது, இந்தியாவில் பரவலாகவும், பெருமளவிலும் நடக்கும் ஊழல் குறித்து கவனிக்கிறது.

ஆளுகின்ற பாஜக அரசானது ஊழலில் மூழ்கித் திளைக்கிறது. 2014 ல் தனது தேர்தல் அறிக்கையில் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் தார்மீகரீதியலும், அரசியல்ரீதியலும், ஒழுக்கரீதியிலும் பாஜகவானது நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி தலைமையில் நம்ப முடியாத அளவுக்கு ஊழல் நடைபெறுகிறது.

அரசியல் கட்சியான பாஜக செல்வத்தைக் குவித்துள்ளது. பாஜக தலைவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் நம்ப முடியாத எதிர்காலத்தை உருவாக்கியுள்ளனர். நரேந்திர மோடியின் கூட்டாளிகளான அதானியும், அம்பானியும் உலகின் மிகச்சில பணக்காரர்களாக உயர்ந்து உள்ளனர். ஆசியாவில் இந்தியாவில் ஊழலின் விகிதம் மலிந்துள்ளதாக, Global Corruption Barometer of Transparency International என்ற உலக அளவிலான குடிமைச் சமூகம் கூறுகிறது. இது மோடியால் உருவானதாகும்.

ஊழலைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த எல்லா சட்டங்களும் மோடியால் வேண்டுமென்றே நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் சாரத்தை இழந்து விட்டது. பாஜகவின் கடந்த எட்டு ஆண்டுகால ஆட்சியில், தகவலையும், பொறுப்பேற்றலையும் கேட்டதற்காக 80 தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர். 2014 ல் UPA அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட குடிமக்கள் சாசனம் & குறை தீர்க்கும் மசோதாவை செயல் இழக்கச் செய்துவிட்டது. அதனை பாஜக அரசானது மீண்டும் கொண்டு வரவில்லை. இடித்துரைப்பாளர் சட்டம் 2014 என்பது ஊழல் குறித்து சொல்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கொண்டுவரப்பட்டது. அது திருத்தப்பட்டு, புகார் அளிப்பவர்களை வெளிப்படுத்தும் வகையிலும், புகார் அளித்ததற்காக வழக்குத் தொடுக்கும் வகையிலும் மாற்றம் செய்யப்பட்டது. பாஜக கொண்டு வந்த திருத்தங்களால் லோக்பால் & லோகாயுதா சட்டம் 2014 அதிகாரமற்றுவிட்டது.

ஊழலை சட்டப்படியானதாக்க, பாஜகவானது பாராளுமன்ற நெறிமுறைகளை முறைகேடாக பயன்படுத்தியது. கம்பெனிகள் சட்டம், வருமான வரிச் சட்டம், FCNR சட்டம், சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் போன்றவை கம்பெனிகளுக்கு ஆதரவாக திருத்தப்பட்டு, கொள்ளையில் பங்கு பாஜகவிற்கு கிடைக்கிறது. புதிய திட்டங்களும் பரஸ்பரம் ஆதாயம் வரும்வகையில் உருவாக்கப்படுகின்றன. தவறிழைப்பதில் எல்லாவித நெறிமுறைகளையும் மீறிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஊழலில் ஒரு கறுப்பு வரலாற்றை உருவாக்கியுள்ளது.

தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக அம்பலமாகியுள்ளது. உச்சநீதிமன்றமானது அதனை அரசியலமைப்புக்கு விரோதமானது எனச் சொல்லி தடைசெய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி விவரங்களை கொடுப்பதை தவிர்க்க பெருமளவு முயற்சி எடுத்தும் வேறு வழியின்றி இப்போது கொடுத்துள்ளது. இதில் 57 % தேர்தல் பத்திரங்களை பாஜக பெற்றுள்ளது. பாராளுமன்ற நெறிமுறைகளை மீறி பிரதம மந்திரியால் இது அறிவிக்கப்பட்ட திட்டமாகும். நன்கொடை அளித்தது யார், பயன்பெற்றது யார் என்ற விவரங்களை மறைப்பதற்காக வருமான வரிச் சட்டமும், கம்பெனி சட்டமும் திருத்தப்பட்டன. பாஜகவும், மோடியும் இன்று அம்பலப்பட்டுள்ளனர்.

அரசாங்க திட்டங்களை அமலாக்குவதில் ஊழல் இருப்பதாக, மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (CAG) 2023 ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். 7.5 இலட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்திய சாலை திட்டம்( PM – JAY), ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் தயாரித்த பிழையான இயந்திரம், பிரதம மந்திரி சுகாதாரத் திட்டம், சிறுபான்மை உதவித்தொகை திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலையில் வசூலிக்கப்படும் டோல் கட்டணம் போன்றவைகளில் நடந்துள்ள ஊழல்களை மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர்( CAG) கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட ஊழல் குறித்து பேச எதிர்கட்சிகள் கோரியபோதும் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்படவில்லை. இந்த அறிக்கையை தயாரித்த மூன்று அதிகாரிகள் மிரட்டப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டனர்.

ராபேல் விமானங்கள் வாங்கியதில் 21, 075 கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றுள்ளது. அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பானது அம்பானிக்கு இலாபமாக மாறியுள்ளது. இதனை நரேந்திர மோடி செய்திருக்கிறார். ராபேல் போர் விமானங்களை பிரான்சைச் சேர்ந்த தசால்ட் விமான நிறுவனத்திடமிருத்தும், அனில் அம்பானியின் ரிலையன்சிடமிருந்தும் வாங்க மோடிதான் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் இருந்த இரகசிய விபரங்களை பிரான்ஸ் வெளியிட்டது. அதில் “ஊழல்” “செல்வாக்கு காட்டப்பட்டது” ” பண மோசடி” ( money laundering) , “பாரபட்சம்” “அதீத விரக்குறைப்பு” போன்றவை இந்த விமானங்கள் வாங்கப்பட்ட போது இருந்தன என்று கூறியது. இதுகுறித்து விசாரிக்க பிரான்ஸ் ஒரு நீதிபதியை நியமித்தது. இந்த விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை என பிரான்ஸ் அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.

அதானி குழுமம் செய்த முறையற்ற கணக்கீடுகள் பற்றி ஹித்தன்பர்க் அறிக்கை கூறியுள்ளது. அதானி குழுமத்தின் இலாபமானது உயர்த்திக் காட்டப்பட்டு, நட்டமானது குறைத்து காட்டப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது ரூ.56,142 கோடிகளை அம்பானி பங்குகளில் முதலீடு செய்துள்ளது; பாரத ஸ்டேட் வங்கியானது ரூ. 38,150 கோடிகளை கடனாக கொடுத்துள்ளது; வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (EPFO) ரூ. 1,65,000 கோடிகளை அதானி துறைமுகத்திலும், அதானி எண்டர்பிரைசிலும் முதலீடு செய்துள்ளது. இவையெல்லாம் மக்களின் பணமாகும். முறைகேடுகளை செபி அமைப்பானது கண்டுகொள்ளவில்லை. உச்சநீதிமன்றம் விவரங்களை கேட்டது. எதிர்கட்சிகள் விசாரணை கோரின. மோடி வெட்கமில்லாமல் அமைதியாக இருந்தார். அவருடைய நண்பரான அதானி நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். அவர் மேலும் பணக்காரராகி உள்ளார்.

கொரோனா காலத்தில் உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதி யில் ஊழல் நடந்துள்ளது. ரூ.12,700 கோடிகள் மூன்று ஆண்டு காலத்தில் வசூலிக்கப்பட்டுள்ளன. தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையின் படி 5516 கோடி ரூபாய்கள் இன்னமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் சொல்வது போல இது தனியார் தனியார் நிதியாகும். எனவே இதனை தணிக்கை செய்ய இயலாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது வராது. நிதி குறித்த விவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. பாராளுமன்றம் விவாதிக்கவில்லை. வெளிப்படைத் தன்மை இல்லை. இரகசியமகவும், தணிக்கைக்கு உட்படாமலும் இருப்பதால், இந்தத் தொகையானது பாஜகாவால் தேர்தலுக்காக செலவழிக்கப்பட்டிருக்கலாம்.

2015 – 2023 காலக்கட்டத்தில் 14.56 இலட்சம் கோடி ரூபாய் வாராக்கடனாக வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்தவை. இது வழக்கமான வங்கி நடைமுறை அல்ல. கார்பரேட் நிறுவனங்களுக்கு பகிரங்கமாக வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான கொள்ளையாகும்.

இவையெல்லாம் அடையாளமான ஊழல்களே. பாஜகவானது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சலுகை செய்துள்ளது. அதனால் பாஜக இலாபம் ஈட்டியுள்ளது. அதானி முந்த்ரா, எஸ்ஸார் சாலயா நொடித்துப் போகும் நிலையில் இருந்தனர். அவர்கள் பாஜகவின் தலையீட்டினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநில சட்ட திருத்தத்தின் மூலம் அதிக விலைக்கு கோடா துறைமுகமானது மின்சாரத்தை மாநில அரசுக்கு விற்றுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டல சட்டமானது அதானி மின் குழுமம் இலாபம் அடையும் வகையில் 2016 ல் திருத்தப்பட்டது. இவையெல்லாம் ஊழலைப் பற்றி சொல்லமுடியாத அளவுக்கு உதாரணங்களாகும். கார்ப்பரேட்டுகளுக்கும், அரசாங்கத்திற்கும் உள்ள உராய்வை போக்கும் வகையில் பணம் செயல்படுகிறது. இவை crony capitalism – ற்கான சிறந்த உதாரணமாகும். இது அபாயகரமானது. இது பொது வளங்களை கொள்ளை அடிக்கிறது.

மேலும் பல ஊழல்கள் இன்னமும் உள்ளன. அவை வெளிவரத் தொடங்கியுள்ளன. ஊழலானது வறுமையை ஆழமாக்குகிறது. மனித மாண்மையும், மனித உரிமையையும் சிதைக்கிறது. வளர்ச்சியை தடம்புரளச் செய்கிறது . ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அழிக்கிறது. பாஜக ஊழலில் மாட்டித் திளைக்கிறது.அரசாளும் தார்மீக பொறுப்பை அது இழந்துவிட்டது. பாஜக வீழ்த்தப்பட வேண்டும். முக்கியமான காலத்தில் கூடியிருக்கிற ஏஐடியுசி நிர்வாகக் குழுவானது, ஊழல் மலிந்த பாஜக அரசை தூக்கி எறிவவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என தீர்மானிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version