நிகழ்ச்சிகள்

AITUC வழக்கு வெற்றி!

Published

on

AITUC Case

AITUC சங்கத்தின் வழக்கு வெற்றி!

ஸ்ரீ கார்த்திக் பேப்பர் மில்ஸ்-தொழிலாளர்கள் வழக்கு வெற்றி!

கோவை தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு!

விபரம் வருமாறு:ஆழியாறு அருகே புளியங்கண்டியில்”ஸ்ரீ கார்த்திக் பேப்பர் மில்ஸ்” இயங்கிவருகிறது.கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் மேற்குறித்த ஆலையில் பணிபுரிந்து வந்தசுமார் ஐம்பத்தி ஐந்து தொழிலாளர்கள் கோவை மாவட்ட பொறியியல் பொது தொழிலாளர் சங்கத்தில்(ஏஐடியுசி) சேர்ந்தனர்.சங்கத்தில் சேர்ந்த ஒரே காரணத்திற்காக, நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்களைப் பழிவாங்க் கூடிய முறையில் பணி மறுப்பு செய்தது.கிளைச்சங்க நிர்வாகிகளின் மீது பகுதி நேரக் கதவடைப்பு எனும் நடவடிக்கையை மேற்கொண்டது.பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சங்கம் எடுத்த முயற்சிகளுக்கு நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை.தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம்.மாவட்ட ஆட்சித்தலைவர்,காவல்துறை அதிகாரிகள் எனப் பலரிடமும் முறையீடுகள் செய்தோம்.இடையில்,வேலையின்மையினால்ஏற்பட்ட வருமான இழப்பின் காரணமாக,அதைத் தாங்க இயலாமல் பல தொழிலாளர் சங்கத்திலிருந்து விலகிக் கொண்டனர்.ஆனால் அவர்களில் யாரும் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும் காரியம் எதையும் செய்யவில்லை.

இறுதியில் பின்வரும் பதினெட்டுத் தொழிலாளர்கள் நெருக்கடிகளைத் தாங்கி சங்கத்துடன் உறுதியாக நின்றனர்.

தொழிலாளர்கள்விபரம்:

1)என்.தங்கவேல்2)

டி.தேவேந்திரன்

3)எஸ்.பார்த்திபன்

4)ஆர்.சக்திவேல்

5)பி.பட்டீஸ்வரன்

6)பி.கோபால்

7)எஸ்.மணிகண்டன்

8)கே.குட்டிமுத்து

9)எம்.துரைசாமி

10)எம்.செல்வராஜ்

11)கே.தண்டபாணி

12)டி.நடராஜ்

13)என்.மனோகரன்

14)எம்.செந்தில்குமார்

15)ஏ.ஜோதீஸ்வரன்

16)கே.கார்தாதிகேயன்

17)டி.கருப்புசாமி

18)எம்.பாலசுப்பிரமணியம்

தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்பது தொடர்பான வழக்கு கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது.நேற்றைய தினம்(12.3.2024) கோவை தொழிலாளர் நீதிமன்றம், தாவாவில் சம்பந்தப்பட்டுள்ள பதினெட்டு தொழிலாளர்களுக்கும் பணித் தொடர்ச்சியுடன் வேலையும்,அவர்களுக்கு வேலை மறுக்கப்பட்ட காலத்திற்கு 25% சம்பளம் மற்றும் அது தொடர்பான இதர சலுகைகளும் நிர்வாகம் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.இது ஒரு முக்கியமானதும், நம்பிக்கையளிக்கக் கூடியதுமான தீர்ப்பாகும்.இதன் மீது நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெரியாது.ஒரு வேளை அவர்கள் இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கின்ற பட்சத்தில், தொழிலாளர்களுக்கு நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பின்படி அவர்களுக்கான பின்பாக்கி ஊதியத்தையும் மேலும் வழக்கு நடக்கும் காலத்தில் மாதா மாதம் தொழிலாளர்கள் ஏற்கனவே பெற்றுக் கொண்டிருந்த ஊதியத்தையும் நிர்வாகம் வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.

1)முதலாவதாக இந்த வழக்கு வெற்றி பெற்றிருப்பதில் சங்கத்தின் கெளரவ தலைவர் வழக்கறிஞர் தோழர் கே.சுப்பிரமணியன், தலைவர் வழக்கறிஞர் தோழர் எஸ்.ராதாகிருஷ்ணன்,வழக்கறிஞர் தோழர் சதீஷ்சங்கர் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது.குறிப்பாக,நீதிமன்ற நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்று அவ்வப்போது தலையீடுகள் செய்தும்,திறம்பட வாதிட்டும் இதில் தோழர் சதீஷ்சங்கர், வழக்கறிஞர் திரு.ஜெகநாதன் மற்றும் வழக்கறிஞர் அலுவலகப் பணியாளர் திரு.சின்னராஜ் குறிப்பிடத்தக்க பங்குப்பணி ஆற்றியுள்ளார்.

2) நீதிமன்ற நடவடிக்கைகளோடு, தொழிற்சங்க ரீதியில் நேரடியான பலகட்டப் போராட்டங்களையும் நாம் நடத்தி இருக்கின்றோம். அத்தகைய போராட்டங்களில் ஆனைமலை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தோழர்கள் குறிப்பாக, கட்சியின் மூத்த தலைவர் தோழர் பி.கண்ணப்பன் அன்றைய செயலாளர் தோழர் காளீஸ்வரன்,இப்போதைய செயலாளர் தோழர் ஆறுமுகம் உள்ளிட்ட தோழர்கள் நமது போராட்டங்களில் நேரடியாக பங்கேற்றும், உறுதுணையாக இருந்தும் செயலாற்றி இருக்கிறார்கள்.

3)அதேபோல் தமிழ் நாடு ஏஐடியுசி -யின் செயலாளர்,மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்எம்.ஆறுமுகம் போராட்டங்களில் பங்கேற்று பலவிதங்களிலும் உதவி புரிந்துள்ளார்.

4)இந்த வழக்கின் வெற்றிக்கு ஒரு வகையில் தங்களுடைய பங்களிப்பினைச் செய்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்தோழர் இரா.முத்தரசன், ஏஐடியுசி -யின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான தோழர் டி.எம்.மூர்த்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் தோழர் பால்பாண்டியன் மற்றும் முகம் காட்ட விரும்பாத ஓய்வு பெற்ற தொழிலாளர் துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆகியோருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

5) சங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக இதுவரையிலும் போராடியுள்ள கார்த்திக் பேப்பர்ஸ் தொழிலாளர்களுக்கும்,அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் சங்கத் தலைமையின் சார்பில் வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.

வழக்கிற்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் தோழர்கள் குட்டி முத்து(குமார்), தேவேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் சிரமம் பாராது தொடர்ந்து பங்களிப்புச் செய்து வந்துள்ளனர்.அவர்களுக்கு நமது தனிச் சிறப்பான வாழ்த்துகள்.

தொடர்ந்து போராடுவோம்!முன்னேறுவோம்!நல்வாழ்த்துகளுடன்,

நிராவாகிகள் மற்றும் நிர்வாகிகக்குழு உறுப்பினர்கள்,KMPPTS-AITUC.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version