நிகழ்ச்சிகள்

வாழ்த்துகள் தோழர் ராஜ்குமார்

Published

on

Rajkumar

தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்களா முன் பூபாலராயர்புரம் மீன் மார்க்கெட் பகுதியை சேர்ந்த வ.உ.சி துறைமுக ஊழியர் ஏஐடியுசி துறைமுக தொழிலாளர் சங்கத்தின் பொருளாளர் தோழர் ராஜ்குமார் அவர்களால் கண்டெடுக்கப்பட்ட தங்க கை செயின்செயின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 01/03/2024 ல் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின் இது சார்ந்த தகவல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக முறையாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.  கொடுக்கப்பட்ட தகவலின் படி தங்க கை செயினுக்குரிய உடமைதாரர் உரிய ஆவனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெரிவித்து இருந்தனர்,

அதன் படி 06/03/2024 அன்று காலை உடமைதாரர்களை வடக்கு காவல்நிலையத்திற்கு வரவழைப்பட்டு, உதவி ஆய்வாளர்கள் மூலமாக தங்க கை செயின் திரு. ராஜ்குமார் அவர்கள் உரியவர்களிடம் ஒப்டைடைத்தார்.

மனித நேயத்துடன் செயல்பட்ட திரு.ராஜ்குமார் அவர்களது செயல்பாட்டிற்கு இன்று அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version